புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் சமர்ப்பிப்புகளை அனுப்பியுள்ளனர்.
இதன்மூலம் தற்போதுள்ள ‘கொடூரமான’ பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். சிறை கைதிகளிடமிருந்தும் பல சமர்ப்பிப்புகள் பெறப்பட்டதாக நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி அடுத்த கட்ட சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்தல் உட்பட இந்த பணிகளை நிறைவு செய்ய இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். அதே நேரம் பதிய சட்டத்துக்கு சில வரையறை காணப்பட வேண்டும், கடந்த காலங்களை போன்று அமைதி போராட்டங்களை கட்டுப்படுத்த அந்த சட்டத்துக்கு இடமளிக்க கூடாது போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டம் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று சில தரப்பு வலியுறுத்தியுள்ளது.எனினும் மாற்றீடாக வேறு சட்டம் கொண்டு வரப்பட கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.
இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மாற்று சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.