பிரித்தானிய தடை அறிவிப்பு விளித்துக்கொண்ட சிங்கள தேசமும் விளங்க வேண்டிய அடுத்த கட்டமும் – விதுரன்

பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிர தானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும்  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவத் தளபதியும் பின்னர் அவ்வியக்கத்துக்கு எதிராக இலங்கை இராணுவத்தின் சார்பாகச் செயற்படும் துணை இராணுவப் படையான ‘கருணா குழு’வை வழிநடத்தியவருமான ‘கருணா அம்மான்’ என்று அறியப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோர் மீது பிரித்தானிய தடை அறிவிப்புக்களை விடுத்திருக்கின்றது.
பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லம்மி விடுத்துள்ள அறி வித்தலின் பிரகாரம் மேற்படி நால்வரும், இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை ஆகிய குற்றங்களுடன் நேரடியான தொடர்புடையவர்கள் என்பது அடையாளப்படுத் தப்பட்டுள்ளது.
அத்தோடு, போரின்போது இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறலைச் செய்வதும்,  இலங்கையில் தொடரும் தண்டனை யிலிருந்து விலக்களிக்கும் கலாசாரத்தைத் தடுப்பதும், இலங்கையின்  புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக இணைந்து பணி யாற்றவும், தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிப்பாடுகளை வரவேற்பதும் தான் இந்த தடைகளின் உண்மையான நோக்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
பிரித்தானிய தடை அறிவிப்பானது ஓரிர வில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்தோ-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மெல்லர் அலட்டிக்கொள் ளாமல் இலங்கையில் தங்கியிருக்கும் போது தான் தடை அறிவிப்பும் வெளியானது. முன்ன தாக, பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தி யத்துக்கான வெளியுறவுச்செயலர் கத்தரின் வெஸ்ட் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். ஆக, கத்தரின் வெஸ்ட்டும், மென் மெல்ல ரும் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தாங்கள் கொண்டு வரவுள்ள பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்
வைத்தபோது அநுர அரசாங்கம் அதனை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுதலித்த நிலையில் தான் குறித்த தடை அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, அநுர அரசாங்கத்துக்கு ‘கடிவாளமிடும்’ பூகோள அரசியலும் அத்தடை அறிவிப்புக்குப் பின்னா லுள்ள முக்கிய அம்சமாகும். அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்ட கடந்த ஏழு மாதங்களில் தமிழினத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமான விடயங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் உட்பட எந்தவொரு நாட்டுக்கு வெளியிலான முன் மொழிவுகளையும் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கவில்லை. தற்போதும் இல்லை. மாறாக, சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு என்ற தமது இடதுசாரித் சித்தாந்தத்தை முன்னிலைப்படுத்தி கடந்த கால கறைபடிந்த கசப்புணர்வுகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலே அநுரவின் அரசாங்கம் நகர ஆரம்பித்தது. மறுபுறத்தில் சீனாவுடன் நெருக்கமான உறவு களைக் கொண்டிருக்கும் அநுர அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் கொண் டிருப்பதால் சர்வதேச நாடுகள் கூட அதனைப் பகைத்துக்கொள்ள ஒருபோதும் விரும்பாது என்ற நிலைமையும் உணரப்பட்டது. இதனால் பொறுப்புக்கூறலை, நீதியை, நியாயத்தை எதிர்
பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பி னருக்கு ‘அனைத்துமே முடிந்துவிட்டது’ என்ற மனோநிலையை ஏற்படுத்திவிட்டது.
அத்தகையதொரு நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் தடை அறிவிப்பானது, பாதிக்
கப்பட்ட மக்களுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர் பார்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடை அறிவிப்பு பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக்கான போராட்டத் தின் மீதான நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகவே உள்ளது.
பிரித்தானியாவின் தடை அறிவிப்பை அடுத்து  நிலத்திலும், புலத்திலும் வரவேற்புக்களும், சாதனை வெளிப்படுத்தல்களும் பலமாகவே இருக்கின்றன. ஆனால் குறித்த அறிவிப்பானது இலங்கையின் உள்ளகத்தில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்களை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது. அடுத்து எடுக்கப்பட வேண்டிய மிகப்பெரிய செயற்றிட்டங்களை மிகக் கவனத்தில் கொள்ள வேண்டியது பொருத்தமானது. அதற்கு முன்பதாக சில புரிதல்களையும் கொள்ள வேண்டி யிருக்கிறது.
இலங்கையின் முக்கிய அதிகாரிகள் மீது சர்வதேச ரீதியாக இத்தகையை தடைகள் ஏற்படுத்தப்படுவது இது தான் முதன் முறையானதல்ல. இதற்கு முன்பும் தடைகள் ஏற் படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இலங்கை படை அதிகாரிகளை இலக்கு வைத்து தடை அறிவிப்புக்களை முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா தான்.
அமெரிக்கா, லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க, ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் பிரபாத் புலத்வத்த, அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக முதலில் தடைகளை விதித்திருந்ததோடு அந்த தடைப்பட்டியலை கடந்த 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, மற்றும் லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்று நீட்டிக் கொண்டது.
அமெரிக்கா போன்றே கனடாவும் சில அதிகாரிகளை இலக்கு வைத்து தடை அறி
விபுக்களைச் செய்தது. அந்த வகையில் இலங்கை யின் படை அதிகாரிகள் மீது தடை விதிக்கும் மூன்றாவது நாடாக பிரித்தானியா உள்ளது.  முன்னதாக, அமெரிக்காவும், கனடாவும் தடை அறிவிப்புக்களைச் செய்யும்போது இராணுவத்தளபதி, முப்படைகளின் தளபதி என்ற பதவி நிலைகளில் இருந்தார் ஜெனரல் சவேந்திரசில்வா. தடை அறிவிப்புக்களால் அவரது பதவி நிலைகள் உட்பட எந்தப்பாதிப்புக்களும் அவருக்கு ஏற் படவில்லை.
அக்காலத்தில், இந்தியா போர் நுட்பங்கள் பற்றிய அனுபவ பகிர்வு மற்றும் விரிவுரைகளுக்காக அழைத்திருந்தது. சவேந்திரவின் கீழ் பயிற்சி பெற்று அவரது ஆசீர்வாதத்துடன் ஐ.நா. அமைதிகாக்கும் படையில் பணியாற்றுவதற்காக இராணுவ வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். படைகளுக்குள் சவேந்திரவின் செல்வாக்கு அதி கரித்தே காணப்பட்டது.
இத்தகைய முன்னுதாரணத்தினைப் பார்க் கின்றபோது, தடை அறிவிப்பானது, அவர்களின் குறித்த நாட்டுக்கான பயணங்களையும், சொத்துக்கள் முடக்கத்தையும் மட்டுமே தான் மட்டுப்படுத்துகின்றது. மாறாக, உள்நாட்டில் அத்தடை அறிவிப்புக்களை மையப்படுத்தியதாக எவ்விதமான தாக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நிகழ்ந்தேறியதாக பதிவுகள் இல்லை. ஆகவே தடை அறிவிப்புக்கள் உள்நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்ந்து எந்தவிதமான நன்மைகளையும் ஏற்படுத்தவில்லை.
அவ்விதமான நிலையில், பிரித்தானியாவின் தற்போதைய தடை அறிவிப்பானது உள்நாட்டில் உறை நிலையில் இருந்த ராஜபக்ஷ முகாமுக்கு புத்துயிரூட்டியிருக்கிறது. சிங்கள,தேசிய மைய வாத சக்திகளுக்கு சக்தியளித்திருக்கிறது. இந்த நிலைமையானது, அடுத்து நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் படையினரைப் பாதுகாப்பதற்கு ராஜபக்ஷகளை விட்டால் யாருமில்லை என்றொரு பிம்பத்தை தோற்றுவித்து தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கை நேரில் அழைத்து,  பிரித்தானியாவின் தடை அறிவிப்பா னது ஒருதலைப்பட்டசமானது, தேசிய நல்லிணக் கச் செயற்பாடுகளை பாதிப்பதாக உள்ள தென்று கட்டமாகக் கூறியிருக்கின்றார். இதன் மூலமாக, ராஜபக்ஷக்களை விடவும் நாங்கள் குற்றமிழைத்த படையினரை மட்டுமல்ல துணை இராணுவக்குழுவின் தலைவரான கருணா அம்மானையும் கூட பாதுகாக்கும் தேசப்பற்றாளர் கள் என்பதை காண்பிக்கவே முனைந்திருக்கின்றார்.
ஆகவே, ஆட்சியில் இருக்கும் முறைமாற்ற வாதிகளும் சரி, அரசு ஆசனங்களை அலங்கரித்து மீண்டும் அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தரப்பினரும் சரி தென்னி லங்கையை மையப்படுத்திய எந்தவொரு அரசியல் சக்தியும் தமிழினத்தின் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்த படைத்தரப்பினருக்கோ, அரசில் தரப்பினருக்கோ எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதில்லை.
அந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களும், அதற்காக உழைத்தவர்களும் பிரித்தானியாவின் தடை அறிவிப்பை பூரிப்புடன் கொண்டாடும் தருணம் இதுவல்ல. ஆற்ற வேண்டிய பணிகள் ஆயிரமுள்ளன.  அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையை விட்டு வெளியேறிவிட்டது. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது.
இந்தத்தீர்மானத்தினை கனடா, மலாவி, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா ஆகிய இணை அனுரசணை நாடுகளுடன் இணைந்து பிரித்தானியாவே தலைமையேற்று கொண்டு வரவுள்ளது. இந்தப் பிரேரணைய வலுவானதாக மாற்றியமைப்பதற்காக பணியாற்ற வேண்டியது முதலாவது விடயமாகும்.
அதுமட்டுமன்றி, உலக நாடுகள் உலகளாவிய நியாயாதிக்க வழக்குகளிற்கு ஆதரவளிப் பதோடு அவற்றை விரிவுபடுத்தலாம்;, இதன் மூலம் குற்றவாளிகளிற்கு எதிராக சர்வதேச அளவில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நகர்வுகளை எடுக்க முடியும்.
ஆதாரங்களை பாதுகாத்து துஷ்பிரயோகங் களை கண்காணிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் பொறிமுறையான ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம்’ போன்றவற்றை உலக நாடுகளின் ஆதரவு டன் வலுப்படுத்த முயலலாம்.
சர்வதேச நிதி நிறுவனங்களும் உதவி வழங்கும் சமூகத்தினரும் மனித உரிமை விடயங் களில் முன்னேற்றம் ஏற்பட்டாலே நிதி உதவி வழங்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதிக்கு மாறு பல கோரிக்கை முன்வைக்கலாம்.
சர்வதேச நாடுகள் தங்கள் வெளிவிவகார கொள்கையில் பாதிக்கப்பட்டவர்கள்-தப்பிப் பிழைத்தவர்களின் குரல்களை உள்வாங்குவ தோடு அதனை மையப்படுத்திய இலங்கையில் இருதரப்பு உறவுகளின் அடிப்படையில் கேள்விக் குட்படுத்தலை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கலாம்.
இவ்வாறு பல பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கையில் பிரித்தானிய தடை அவற்றுக்கான முதல்நுழை வாயிலாகக் கொள்வது தான் பொருத்தமானது.