பிரித்தானியாவில் அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல்

பிரித்தானியாவில் தியாக தீபம் அன்னை பூபதியின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அடையாள உண்ணாவிரதமும் உணர்வுப்பூர்வமாக இடம்பெற்றது.

பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் அந்த நாட்டு பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று (19) இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய நேரப்படி முற்பகல் பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உணர்வுப்பூர்வமாக நினைவேந்தல் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு தியாக தீபம் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்தூவியும், விளக்கேற்றியும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அத்துடன் அடையாள உண்ணாவிரத போராட்டத்திலும் தமிழ்த் தேசிய உணர்வோடு அவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.