Tamil News
Home செய்திகள் பாலைப்பாணியில் கிளிநொச்சி நபர் சுட்டுப் படுகொலை

பாலைப்பாணியில் கிளிநொச்சி நபர் சுட்டுப் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்இன்று (06) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலராசா ஜெதீஸ்வரன்(48) என்ற  குறித்த நபர் தனது வயலினை அறுவடை அங்கு சென்ற வேளை சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட விரோதம் காரணமாக  இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

மாங்குளம் சிறிலங்கா காவல்துறையினர் விசாரணையினை மேற்கொண்டு வருவதாகவும் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட் டுள்ளதாகவும்
தெரியவருகிறது.

Exit mobile version