Tamil News
Home ஆய்வுகள் பாகிஸ்தானை தாக்குவது இந்தியாவுக்கு சாத்தியமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

பாகிஸ்தானை தாக்குவது இந்தியாவுக்கு சாத்தியமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் சுவிற்சர்லாந்து என்று அழைக்கப் படும் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல் கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டு ஜம்மு காஸ்மீர் மாநிலத் தின் காணி அதிகாரத்தை கொண்ட 370 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டபோது புல்மாவா பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 40 இந்தியப்படையினர் கொல்லப்பட்ட பின்னர் இடம்பெற்ற மிகவும் மோசமான தாக்குதல் இதுவாகும்.
இந்தியாவில் அமெரிக்காவின் துணை அதிபர் டி.ஜே.வான்ஸ் தங்கியிருந்தபோது இந்த தாக்குதல் நடைபெற்றதுடன், இந்திய பிரதமர் நரேந்திரமோடி சவுதிஅரேபியாவில் தங்கியிருந்த சமயம் இந்த தாக்குதல் இடம்பெற்றதும், மோடி தனது பயணத்தை இடையில் கைவிட்டு நாட்டுக்கு அவசரமாக திரும்பியதும் இந்த தாக்குதல் அனைத்துலகமட்டத்தில் பலத்த பிராச்சாரமாக மாறுவதற்கு களம் அமைத்துக்கொடுத்துள்ளது.
நான்கு தாக்குதலாளிகள் இந்த தாக்குத லில் ஈடுபட்டதுடன், அதில் மூவர் எல்லை தாண்டி பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும், ஒருவர் உள்நாட்டில் இருந்து அவர்களை வழிநடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ உடையில் ஏ.கே-47 மற்றும் எம்-4 கார்பைன் துப்பாக்கிகள் சகிதம் வந்த அவர்கள் ஆண்களை குறிவைத்து, அதுவும் முஸ்லீம் மக்கள் அல்லாதோரை கண்டறிந்து தாக்குதல் நடத்தியுள்ள னர்.
தாக்குதல் நடத்தியவர்கள் தாம் ஏன் தாக்குதல் நடத்தினோம் என்பதையும் கூறிச் சென்றுள்ளனர். 2014 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பாரதிய ஜனதாக் கட்சி அரசு முஸ்லீம் மக்கள் மீது கடும்போக்குடன் நடந்துகொண்டுவருவதுடன், 2019 ஆம் ஆண்டு காஸ்மீரின் காணி அதிகாரத்தை நீக்கியதுடன், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உட்பட பல அரசியல்வாதிகளை வீட்டுக்காவலிலும் வைத்து வன்முறை மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தியிருந்தது.
காணி அதிகாரத்தை அகற்றுவதன் மூலம் அந்த பகுதியில் வெளிமானிலத்தவர்கள் காணி களை வாங்கலாம் என்ற நிலையை ஏற்படுத்திய பா.ஜ.கா அரசு, அங்குள்ள மக்களின் விகிதாசாரத்தை மாற்றி அரசியலை கைப்பற்றவும் திட்டமிட்டது. மாநிலத்திற்கு இருந்த காணி அதிகாரம் நீக்கப்பட்ட பின்னர் அங்கு 85,000 வெளிமானில மக்கள் காணிகளை வாங்கி குடியேறியுள்ளனர். எனவே அந்த மக்கள் வெளியேற வேண்டும் என்பதே தாக்குதலாளிகளின் கோரிக்கையாக இருந்துள்ளது.
அண்மைக்காலமாக இந்த பிரதேசத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்ததுடன், அது காஸ்மீரின் பொருளாதாரத்திற்கு 15 விகித பங்களிப்பையும் வழங்கிவருகின்றது. பள்ளத் தாக்குகள் நிறைந்த இந்த பகுதி ஏப்பிரல் தொடக்கம் ஒக்டோபர் வரையிலும் சுற்றுலாத்துறையின் மிக முக்கிய பிரதேசமாகும். அமர்நாத் யாத்திரை ஜூலை மாதம் இடம்பெறும்போது அதில் பெருமளவான மக்கள் கலந்துகொள்வதுண்டு. ஆனால் இந்த முறை அது சாத்தியமற்றதாகவே தென்படுகின்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து பெருமளவான சுற்றுலாப்பயணிகளும், குடியேற்ற வாசிகளும் அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
அதாவது இந்தியாவின் பாதுகாப்பு நடைமுறை மீது மக்கள் நம்பிக்கை இழந்தவர்களா கவே காணப்படுகின்றது. இந்தியாவிலேயே அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதி காஸ்மீராகும். அங்கு உள்ள 11 மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதத்தின் படை குவிப்பை இந்திய அரசு அங்கு மேற்கொண்டுள்ளது. ஆனால் அதனையும் தாண்டி அந்த பாதுகாப்பு வலையத்திற்குள் ஊடுருவிய ஆயுததாரிகள் தாக்குதலை நடத்தியது இந்தியாவின் புலனாய்வுத்துறையின் தோல்வியாகவும் சில படை அதிகாரிகள் விபரித்துள்ளனர்.
அதேசமயம், தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் இருந்து 143 கி.மீ தொலைவில் உள்ள மற்றுமொரு காஸ்மீரின் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் ஆயுதங்கள் மீட்கப்பட்ட தாகவும் இந்திய தரப்பு தெரிவித்துள்ளது. அதா வது ஆயுததாரிகள் தொடர் தாக்குதல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதையே இது காட்டுகின்றது. எதிர்ப்பு முன்னணி படையினர் என்ற அமைப்பே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. எனினும் இன்றுவரை தாக்குதல் நடத்தியவர்களை அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்திய படையினரால் கண்டுபிடிக்க முடிய வில்லை.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என தெரிவித்துள்ள இந்தியா பாகிஸ்தான் மீது பல நடவடிக்கைகளை உடனடியாக அறி வித்துள்ளது. பாகிஸ்த்தான் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் அனுசரணையுடன் ஏற் படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு நீர் வழங்கலை மேற்கொள்ளும் இன்டூஸ் நதி திட்டத்தில் இருந்து வெளியேறுவதாகவும், பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள சில அதிகாரிகளை வெளியேற்றுவதாகவும், இஸ்லாமாபாத்தில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாகவும் அல்லது தற்காலிகமாக அங்குள்ள அதிகாரிகள் அனைவைரையும் வெளியேற்றுவதாக வும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை தற்போது உள்நாட்டில் இந்திய அரசுக்கு எதிராக உருவாகிவரும் கருத்துக்களை முறியடிப்பதற் கானதாகவே கொள்ளப்படலாம். இந்தியாவைப் போல பாகிஸ்தானும் ஒரு ஆணுவாயுத நாடு. மேலும் இந்தியர்கள் எண்ணுவது போல பாகிஸ் தனை இந்தியா சுலபமாக தாக்க முடியாது. கடந்த வருடம் பாகிஸ்தானில் உள்ள ஈரானுக்கு எதிரான ஆயுததாரிகளின் முகாம்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு 24 மணி நேரத்தில் பாகிஸ்த்தான் பதிலடி கொடுத்திருந்தது.
அதாவது உடனடியாகவே இலக்குகளை கண்டறிந்து தாக்கும் வல்லமையில் அதன் புல னாய்வுத்துறை உள்ளதாக அவதானிகள் இந்த தாக்குதலை பார்த்திருந்தனர். தற்போது இந்திய ஆய்வாளர்கள் பாகிஸ்த்தானில் உள்ள ஆயுதக் குழுக்களின் 12 தளங்களை தாக்கவேண்டும் என கூறுகின்றனர். ஈரானை போல இந்தியா நேரிடை யாக தாக்குவது என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான போராகவே மாற்றமடையும்.
2023 ஆம் ஆண்டு ஓக்டோபர் 7 ஆம் நாள் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் கொடுக்கும் பதிலடி போல இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் பாகிஸ்தானும் ஹமாசும் ஒன்றல்ல என்பதை இந்திய அதிகாரிகள் நன்கு அறிவார்கள். பாகிஸ்த்தானுக்கும், சீனாவுக் கும் உள்ள நெருக்கம் உலகம் அறிந்ததே. தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இணைந்து இயங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்துமாக இருந்தால் பாகிஸ்தானை வைத்து தான் இந்தியாவை சீனா வீழ்த்தும்.
அதற்கான முன்நகர்வாகவே பங்களா தேசத்தை தற்போது பாகிஸ்த்தான் தனதாக்கி கொண்டுள்ளது. அதாவது மீண்டும் பங்களாதேசம் பாகிஸ்தானுடன் இணைந்துள்ளது. மாலைதீவுக்கும் ஏவுகணைக் கப்பல் ஒன்று துருக்கியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியம் ஒரு மோதலுக்கு தன்னை தயார்ப்படுத்திவருகின்றது.
இந்தியாவை சீனாவுடன் மோதவிடுவதில் அமெரிக்கா முனைப்பாக நிற்பதாக அண்மையில் பேராசிரியர் ஜெப்ரி சார்க்ஸ் தெரிவித்திருந்தார். சீனாவுக்கும் அது தெரியும், எனவே தான் இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகள் ஆரம்ப மாகியுள்ளது போல் தெரிகின்றது.
தலிபான்கள் மீதான ரஸ்யாவின் தடை நீக்கம், இந்தவாரம் பங்களாதேசத்தின் கடற்படை யும், ரஸ்ய கடற்படையும் மேற்கொண்ட ஒத்திகை என்பன பல செய்திகளை தாங்கி நிற்கின்றன. சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற முற்படுவதும், இந்துசமுத்திரப் பிராந்தி யத்திற்கு அண்மையாக அமெரிக்காவின் இர ண்டு விமானந்தாங்கி கப்பல்கள் நிற்பதும், பிரித்தானியாவின் விமானந்தாங்கி கப்பல் பசுபிக்பிராந்தியம் நோக்கி நகர்வதும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் படைவலுச் சமநிலை குழப்பமடையப் போகின்றது என்ற செய்தியை தான் சொல்லி நிற்கின்றன.
Exit mobile version