பாகிஸ்தானுடனான உறவுகளை துண்டித்த இந்தியா

இந்தியாவின் பைசரன் பள்ளத் தாக்கில் உள்ள பஹல்கம் பகுதியில் செவ்வாய்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவுக் கும் பாகிஸ்தானுக்கும் இடையி லான உறவுகள் மிகவும் மோச மடைந்துள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களும் அதிகரித்துள்ளன.
இனம்தெரியாத ஆயுததாரி கள் மேற்கொண்ட இந்த தாக்கு தலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என தெரிவித்துள்ள இந்தியா பாகிஸ்தான் மீது பல எதிர்நடைவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத் தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து நடவடிக்கை கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள பாகிஸ் தான் தூதர கத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் உட்பட தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 55 இல் இருந்து 30 குறைப்பது, பாகிஸ்த்தானில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர்களை மீளப்பெறுவது, இந்தியாவில் உள்ள பாகிஸ் தான் மக்களின் நுழைவு அனுமதிகளை இரத்துச் செய்து அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவது, 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட பாகிஸ்தா னுக்கு நீர் வழங்கலை மேற்கொள்ளும் இன்டூஸ் நதி திட்டத்தில் இருந்து வெளியேறுவது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளை இந்தியா அறிவித்துள்ளது.
இதற்கு பதிலடியான நடைவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தானும் ஆயத்தமாகி வரு வதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச் சகம் தெரிவித்துள்ளது. காஸ்மீரில் இடம்பெற்ற தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துவரும் பாகிஸ்த்தான், இந்தியாவின் ஓருதலைப்பட்சமான நடவடிக் கைகளையும் கண்டித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல் லையின் ஊடான வர்த்தகம் கடந்த வருடம் 243 மில்லியன் டொலர்களை எட்டியிருந்தது. தற்போது இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கை என்பது இரு நாடுகளின் பொருளாதாரத்திற்குமத் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதுடன், இந்த பகுதியின் ஊடாகவே இந்தியாவுன் பொருட்கள் ஆப்கானிஸ்தானுக்கும் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கது.