Tamil News
Home செய்திகள் பலஸ்­தீனின் ஜெனின் முகாம் மீது இஸ்­ரே­லிய படை­யினர் தாக்குதல்-பா.உ.இம்ரான் மஹ்ரூப் கண்டனம்

பலஸ்­தீனின் ஜெனின் முகாம் மீது இஸ்­ரே­லிய படை­யினர் தாக்குதல்-பா.உ.இம்ரான் மஹ்ரூப் கண்டனம்

பலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலினால் இழைக்கப்படும் அநியாயங்களை விளங்கிக் கொள்வதற்கு இந்த மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜெனின் அகதி முகாம் மீதான கொடூர தாக்குதலே போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நேற்று (18)  இடம்பெற்ற பலஸ்தீன் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பலஸ்­தீனின் ஜெனின் முகாம் மீது இஸ்­ரே­லிய படை­யினர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முன்­னெ­டுத்த பலத்த தாக்­கு­தல்­களில் 12 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்ட சம்­பவம் அங்கு வர­லாற்றில் இடம்­பெற்ற மிக மோச­மான ஆக்­கி­ர­மிப்­பு­களில் ஒன்­றாக வர்­ணிக்­கப்­ப­டு­கி­றது. இந்தக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்­களில் சுமார் 100 பேர் காய­ம­டைந்­த்துடன் 4000 இற்கும் அதி­க­மானோர் தமது வீடு­களை விட்டும் வெளி­யே­றி­யி­ருக்கின்றனர்.

1000 இஸ்­ரே­லிய படை­யினர் இத் தாக்­கு­தலில் பங்­கெ­டுத்­த­தா­கவும் இதன்­போது தாக்­குதல் ஹெலி­கொப்­டர்கள், ட்ரோன்கள், தாக்­குதல் விமா­னங்கள் மற்றும் கன­ரக ஆயு­தங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும் சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர். சுமார் 20 தட­வைகள் ட்ரோன் மூலம் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இத் தாக்­குதல் மேற்குக் கரையில் கடந்த 20 வரு­டங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான தாக்­கு­தல்­களில் ஒன்று என மிடில் ஈஸ்ட் மொனிடர் எனும் ஊடகம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இத் தாக்­கு­தல்­களை பலஸ்­தீன அதி­கார சபை உட்­பட சர்­வ­தேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்­பு­களும் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன.

அதுமாத்திரமன்றி, இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே தினமும் ஒரு பலஸ்தீனராவது இஸ்ரேலிய படைகளாலும் சட்டவிரோத குடியேற்றவாசிகளாலும் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டுமே வருகின்றனர். இந்த வரு­டத்தின் முதல் ஆறு மாதங்­களில் மாத்­திரம் இஸ்­ரே­லினால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களில் 26 சிறு­வர்கள் உள்­ளிட்ட 170 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

ஐக்­கிய நாடுகள் சபையின் மனி­தா­பி­மான விவ­கா­ரங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அலு­வ­ல­கத்தின் அறிக்­கை­க­ளுக்­க­மைய இந்த வரு­டத்தின் முதல் ஆறு மாதங்­களில் மாத்­திரம் இஸ்­ரே­லிய குடி­யே­றிகள், மாதாந்தம் தலா 95 தாக்­கு­தல்­களை பலஸ்­தீ­னர்கள் மீது நடத்­தி­யுள்­ள­னர்.  இதற்­க­மைய மொத்­த­மாக 570 தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இவற்றில் சுமார் 160 தாக்­கு­தல்­களில் பலஸ்­தீ­னர்கள் காய­ம­டைந்­துள்­ளனர்.

இது இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் மாத்­தி­ர­மன்றி சட்­ட­வி­ரோத யூத குடி­யேற்­ற­வா­சி­களும் அப்­பாவி பலஸ்­தீ­னர்கள் மீது எந்­த­ளவு தூரம் வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­வி­டு­கின்­றனர் என்­பதைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக இன்று வரை நூற்றுக் கணக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவற்றில் ஒன்றேனும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே கவலையான செய்தியாகும்.

சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலின் இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும். தீவிரவாத இயக்கங்களை தடை செய்து அவற்றுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது போன்று மனித குலத்துக்கு எதிரான தீவிரவாதத்தில் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

Exit mobile version