Tamil News
Home செய்திகள் பயங்கரவாத ஒழிப்பிற்கு ஐ.நா.விடம் உதவி கோரும் ரணில்

பயங்கரவாத ஒழிப்பிற்கு ஐ.நா.விடம் உதவி கோரும் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னிஸுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (08) இடம்பெற்ற சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், லெயிலா எஸாரக்கி, ஆட்ரியா டி லாண்டரி மற்றும் கீதா சபர்வால் ஆகிய ஐ.நா. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் இதற்குத் தேவையான நிதியை பெறுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

Exit mobile version