”பணையக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தல்

“​காசா விவ​காரத்​தில் இஸ்​ரேல் – ஹமாஸ்  இடை​யில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. பணையக் கைதி​களை ஹமாஸ் விடுவிக்க வேண்​டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​து உள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் திகதி இஸ்​ரேலில் நடை​பெற்​றுக் கொண்​டிருந்த இசை நிகழ்ச்​சி​யில் ஹமாஸ்  திடீர் தாக்​குதல் நடத்​தியது. இதில் 1,200 பேர் கொல்​லப்​பட்​ட​தாக இஸ்​ரேல் தெரி​வித்​தது. மேலும், இளம்​பெண்​கள் உட்பட 251 இஸ்​ரேலியர்​களை ஹமாஸ்  பணைக் கைதி​களாக பிடித்து சென்​றனர்.

இதையடுத்து காசா மீது இஸ்​ரேல்   கடுமை​யாக தாக்​குதல் நடத்​தி​ வருகின்றது. இது​வரை இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலில் காசா​வில் 56,000-க்​கும் மேற்​பட்ட பாலஸ்​தீனர்கள் கொல்​லப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்​று​முன்​தினம்   வெளி​யிட்ட அறி​விப்​பில்,காசா தொடர்​பாக இஸ்​ரேல் – ஹமாஸ் இடையே ஒரு வாரத்​தில் போர் நிறுத்​தம் ஏற்பட வாய்ப்​புள்​ளது. அதற்​கான பேச்​சு​வார்த்​தை​யில் இஸ்​ரேல் பிரதமர் நேதன்​யாகு ஈடுபட வேண்​டும்.

மேலும், இஸ்​ரேல் பணையக் கைதி​களை ஹமாஸ்  உடனடி​யாக விடு​வித்து போர் நிறுத்த ஒப்​பந்​தத்​துக்கு வரவேண்டும். போர் நிறுத்​தம் தொடர்​பாக இறுதி ஒப்​பந்​தத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு முடிவு செய்ய வேண்​டும். இவ்​வாறு டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.