Tamil News
Home செய்திகள் நேற்று மட்டும் 309 கொரோனா தொற்றாளர்கள்; மொத்த எண்ணிக்கை 6,287 ஆக உயர்வு

நேற்று மட்டும் 309 கொரோனா தொற்றாளர்கள்; மொத்த எண்ணிக்கை 6,287 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று மாத்திரம் 309 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் 188 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் இருந்த 02 பேருக்கும், கட்டுநாயக்கவில் 22 பேருக்கும், மினுவாங்கொடை கொரோனாத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 97 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 287ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்துள்ளனர். 2,712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Exit mobile version