Tamil News
Home செய்திகள் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சம் -எம்.ஏ. சுமந்திரன்

நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சம் -எம்.ஏ. சுமந்திரன்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை, இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களையும் தகர்த்திருக்கிறது.

மரணித்தவர்களின் நினைவு தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்ச கட்டம். இராணுவமும்  காவல்துறையினரும்  அந்த இடத்திற்கு  சென்று  பார்வையிட்ட பின்னர் தான் இது செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது.

அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” என்றார்.

Exit mobile version