Tamil News
Home செய்திகள் நினைவு கூர தடை- யாழ் பொது நூலக வளாகத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கை

நினைவு கூர தடை- யாழ் பொது நூலக வளாகத்தில் காவல்துறையினர் கண்காணிப்பு நடவடிக்கை

யாழ்ப்பாண மாநகர முதல்வரால் யாழ்.நுாலக எரிப்பு நினைவேந்தல் நிகழ்வு, யாழ் நுாலகத்தில்  இடம்பெற இருந்த நிலையில், யாழ்ப்பாண  காவல்துறையினர் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இந் நிலையில் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள், இன்றைய தினம் யாழ் மாநகரசபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில், தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக காவல்துறையினரால் யாழ். நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது.

Exit mobile version