Tamil News
Home உலகச் செய்திகள் நாம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் சிறப்பாக இல்லை- சீனா

நாம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறன் சிறப்பாக இல்லை- சீனா

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பதாக மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார். 

சீனா இதுவரை நான்கு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தடுப்பூசிகள் வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த மூத்த நோய் கட்டுப்பாட்டு அதிகாரிகளில் ஒருவரான காவ் ஃபூ, தடுப்பூசிகளின் செயல்திறனை அதிகரிக்க பல கொரோனா தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த ஆலோசிப்பதாகவும் சீனா இதுவரை நான்கு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி பொது மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. அத்தடுப்பூசிகள் வெளிநாட்டில் பரிசோதனை செய்த போது, சில பரிசோதனைகளில் அதன் செயல் திறன் 50% வரை குறைவாக உள்ளது தெரியவந்தது.

 சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் கடந்த சனிக்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சீன கொரோனா தடுப்பூசிகள் அதிக பாதுகாப்பை வழங்கவில்லை.

கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க பல தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த சீனா ஆலோசித்து கொண்டிருக்கின்றது. கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை முழுமையாக வெளிக் கொண்டுவர செலுத்தப்படும் டோஸ்களின் எண்ணிக்கையை மாற்றுவது மற்றும் செலுத்தப்படும் டோஸ்களுக்கு இடையிலான காலத்தை மாற்றுவது போன்றவைகள் அடங்கும்“என்றார்.

இத்தனை விவரங்களைக் கூறிய பிறகு, தான் கூறிய கருத்துகளில் இருந்து பின்வாங்கினார் காவ் ஃபூ,. “உலகம் முழுக்க உள்ள கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறன் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாகவும் இருந்திருக்கின்றன” என சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸிடம் கூறியுள்ளார்.

மேலும் “கொரோனா தடுப்பூசியின் செயல் திறனை எப்படி அதிகரிப்பது என்பதுதான் கேள்வி, அதைத்தான் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகள் கவனத்தில் கொள்ளவேண்டும்” என அப்பத்திரிக்கையிடம் காவ் ஃபூ கூறியுள்ளார்.

 நன்றி- பிபிசி

Exit mobile version