Tamil News
Home செய்திகள் நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்?

நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை குடும்பம்?

இலங்கையிலிருந்து சென்று அவுஸ்திரேலியாவில் குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி மரணமடைந்ததையடுத்து அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்கள் நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
ராஜ் உடவத்த, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலை விசா ஒன்றின்கீழ், தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,ராஜ் உடவத்த  புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துள்ளதையடுத்து அக் குடும்பத்தின் தஞ்சக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அனைவரும் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
Exit mobile version