Tamil News
Home செய்திகள் நல்லூர் கந்தனை தரிசித்த படைத் தளபதி

நல்லூர் கந்தனை தரிசித்த படைத் தளபதி

இன்றைய தினம் (14.08) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி மகேஸ் சேநாயக்க வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திற்கு சென்று விசேட புசை வழிபாடுகளில் கலந்து கொண்டார். அத்துடன் உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இராணுவத் தளபதியுடன் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மற்றும் இராணுவத்தினரும் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவத் தளபதியின் வருகையை முன்னிட்டு ஆலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  அடுத்து ரணில் விக்கிரமசிங்கவின் வருகையை முன்னிட்டும் பாதுகாப்பு பல்படுத்தப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க 3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வருகை தரவுள்ளார். இதன் போது யாழ். நல்லூர் கந்தனை தரிசிக்க வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

Exit mobile version