Tamil News
Home செய்திகள் நல்லூரில் காவல்துறையின் சோதனைகளும், கெடுபிடிகளும்

நல்லூரில் காவல்துறையின் சோதனைகளும், கெடுபிடிகளும்

இன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக ஆலய சூழலில் உள்ள குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கை (மினி றவுண்டப்) மேற்கொள்ளப்பட்டது.

நல்லூரில் பெருமளவு காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டதுடன், சிவில் உடை தரித்த காவல்துறையினரும் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மூத்த பிரதிகாவல்துறை அதிபர் உட்பட அனைத்துப் பிரதேச காவல்துறை நிலையங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட காவல்துறையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இதன் போது அவர் நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் போது நல்லூரிற்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version