Tamil News
Home உலகச் செய்திகள் தேவாலயம் மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்

தேவாலயம் மீதான தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்

ஆப்பிரிக்காவிலுள்ள பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.எஸ் , அல்-கொய்தா போன்ற பயங்கராவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில், அந்நாட்டு இராணுவமும் பொலிஸாரும் கடும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றையதினம் அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர்.

அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.  இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லையென என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த அக்டோபர் மாதம் பர்கினோ பாசோவிலுள்ள மசூதியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் குறிப்பிடத்தக்கது

Exit mobile version