Tamil News
Home உலகச் செய்திகள் துருக்கிப் படைகள் சிரியாவில் நிலை கொள்ளும்

துருக்கிப் படைகள் சிரியாவில் நிலை கொள்ளும்

சிரிய மக்கள் பாதுகாப்பாக வாழும் வரை அங்கு துருக்கிப் படைகள் நிலைகொள்ளும் என துருக்கி அதிபர் ஏர்டோகன் துருக்கி தலைநகர் அங்காராவில் வைத்து தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கூறும் போது, சிரிய மக்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழும் வரை துருக்கிப் படைகள் சிரியாவில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.

துருக்கி எல்லையை அண்டிய சிரியாவின் பகுதிகளில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், கடந்த ஆண்டு அவர்கள் மீது தாக்குதுல் நடத்த துருக்கி அதிபர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர். மேலும் வடக்குப் பகுதியிலும் சில இடங்களைக் கைப்பற்றிய துருக்கிப் படைகள் சிரியாவில் முகாமிட்டுள்ளனர்.

6 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்திற்கும், சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்குமிடை உள்நாட்டுப் போர் நடைபெறுகின்றது.

ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்ய விமானப் படைகள் சிரியாவில் முகாமிட்டு, போரில் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக அண்மைக் காலத்தில் ஆசாத்தின் கை ஓங்கி வருகிறது. சுமார் 70 சதவீதப் பகுதிகள் ஆசாத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

Exit mobile version