Tamil News
Home உலகச் செய்திகள் திருப்பூர்: ஈழ அகதிகள் முகாமில் 69 பேருக்கு கொரோனா

திருப்பூர்: ஈழ அகதிகள் முகாமில் 69 பேருக்கு கொரோனா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து சுகாதாரப்பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அதன் ஓரு பகுதியாக இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்த சூழலில் உடுமலையை அடுத்த தளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஈழ அகதிகள் முகாமில் 74 குடும்பங்களில் சுமார் 270 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் தளி பேரூராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. அதில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version