பெருநிலப்பரப்புவாதம்( Continentalism) அல்லது தலைநிலப்பகுதிவாதம் புவிசார் அரசியல் ஒரு கருத்தியலாகவே உருவாக் கப்பட்டு, இலத்தின் அமெரிக்க தேசத்திற் கான ஒருங்கிணைக்கும் கருவியாக உப யோகப் படுத்தப்பட்டது. பேர்கோலியோவின் குழு பெரு நிலப்பரப்புவாதக் கருத்தியலிற்கான அடிப்
படைகளை கட்டமைத்தது மட்டுமல்லாது, இலத்தின் அமெரிக்க திருச்சபை, பூகோளத் திருச்சபையில் எவ்வாறு தனித்துவ பங்களிப்பை வழங்க முடியும் என்கின்ற வழிவரைபடத்தையும் முன்னிறுத்தியது. இதில் குறிப்பாக Aparecida ஆவணம் திருச்சபையின் புவிசார் அரசியலின் போக்கை குறிப்பிடுகின்றது. உதாரணத்திற்கு வெளிநாட்டுக் கொள்கை இலத்தின் அமெரிக்க ஒருங்கிணைப்பில் எவ்வாறு இருக்க வேண்டும் என அடிக்கோடிடுகிறது. ஒருங்கிணைவு வேறுபாட்டை ஊக்குவிக்கின்றது என்ற ஏற்பு ஏக பண்பாட்டை ஏற்றுக் கொள்வதல்ல.
மேற்குறிப்பிட்டதன் ஒரு அலகாகவே ”பொது மக்கள் இறையியலை” நோக்க வேண்டும். பொது மக்கள் இறையியல் மேய்ப்புப்பணி அரசாங்கத் தன்மையையும் (Pastral Governmentality) புவிசார் அரசியலையும் ஒரே சட்டகத்திற் குள்ளிருந்து அணுக முயற்சிக்கின்றது. இவற்றிற்கு அடிப் படையான கருத்தியலாக மக்கள்-தேசம் (People Nation) இருப்பதோடல்லாமல், மக்களை ஒருங்கி ணைக்கின்ற வெளியை உருவாக்கி சுயநிர்ணய உரிமைக்கான விருப்புரிமையை வழங்குகின்றது. இது விளிம்புமைய கட்டமைப்பை மாற்றாக முன்வைக்கின்றது.
திருத்தந்தை பிரான்சிசின் வரலாற்றுப் பரிணாமம் விளிம்புமைய புவிசார் அரசியலை உள்ளடக்கமாகக் கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய விரிவாக்கத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு நபராக இருந்ததை அவதானிக்க முடிவதோடு பல்வகைத் தன்மையை யதார்த்த மானதாக, இயற்கையானதாக அங்கீகரித்து; ஐரோப்பிய அல்லது ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புகளின் ஏக பண்பாட்டு அரசியல் திட்டத்திற்கு ஒவ்வாததாக அதை மறுதலிக்கின்ற அல்லது அதற்கு மாற்றான ஒரு கருத்தியலை, ஒழுங்கை முன்னிறுத்தி நகர்வது துணிகரமிக்கது.
இச்செயற்திட்டம் மக்களை மக்களாகவே பார்க்கின்ற, அவர்களது கூட்டு இருப்பை உறுதி செய்வதாக அமைகின்றது. ஐரோப்பியமைய பார்வையை/ஐரோப்பிய/மேற்குல மையத்திற் கூடாக நோக்குகின்ற பார்வைப் பரப்பு இல்லாது போதல் என்பது ஏறக்குறைய ஏகாதிபத்திய பேரரசின் அலகுகளை இல்லாமற் செய்தலாகும். மூன்றாவது வழியூடாக அணுகுமுறையை மற்ற மைகளை (Other) மையப்படுத்தி அவர்களை வரலாற்றின் கதாபாத்திரத்திரங்களாக உருவகித்து விடுதலையை உள்ளீடாக கொண்ட அணுகு முறையை எல்லாவற்றிலும் விரிவுபடுத்து கின்றது.
திருத்தந்தை தற்போதைய அரசியல் உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். ஜோன் ஜக்கென்பெறி குறிப்பிடுகின்ற ”மூன்று உல கங்கள்” மேற்கு, கிழக்கு, தெற்கு, உலக ஒழுங்கை வடிவமைக்கையில் எழுகின்ற போட்டி. இதில் குறிப்பிடப்படும் மேற்குலகு-ஐக்கிய அமெரிக்காவையம் ஐரோப்பாவையும் உள்ளடக்கி யது. கிழைத்தேசம்-சீனாவையும் ரஷ்யாவையும், தெற்குலகு மேற்குலகல்லாத அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளைக் குறிக்கின்றது. மேற்குலகு நவதாராளவாத சனநாயகத்தையும் கீழைத்தேசம், மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமத்துவ இறைமையை, தனித்துவத்தை, பல்வகைமையை, அபிவிருத்தியை மனித உரிமையை முன்னோக்கி எடுத்துச் செல்கிறது. இவ்விரண்டுமே ஏகாதிபத்திய அதிகாரத்திற்கான போட்டியை தெற்கு நோக்கியும், தெற்கில் மேலும் பரவலாக்குவதற்கு முயற்சிக்கின்றது. தற்போதைய உலக ஒழுங்கு மிகை ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருப்பதை அவதானிக்கும் எவரும் அவற்றை கண்டிக்கத் தவற மாட்டார்கள். திருத் தந்தை பிரான்சிசும் தற்போதைய உலக ஒழுங்கை கண்டித்திருக்கின்றார். அவர் கண்டிப்பதற்குரிய காரணத்தின் வரலாற்றுப் பின்னணி பற்றிய தெளிவு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
திருத்ததந்தை பிரான்சிஸ் தெற்குலகில் இருந்தே (ஆர்ஜென்டீனா) உதயமாகிறார். ஐரோப்பிய மைய திருச்சபைக்கு இது பெரும் சவாலாக இருந்திருக்கலாம். தனது பதவிக்காலத்தில் திருச்சபையை விளிம்பு மையத்தை நோக்கி நகர்த்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தமை அவரது நியமனங்கள் எழுத்துக்கள் உரைகள், பயணங்களின் மூலம் தெரிய வந்தன. அதேபோல் உலக யதார்த்தத்தையும் விளிம்புநிலை மையத்திலிருந்து நோக்க வேண்டிய தேவையை கற்பிதமாக அறிமுகப்படுத்தியிருப்பது பிரளய மாற்றமாக கருத வேண்டியிருக்கும். விளிம்புநிலை மைய நோக்கு நிலை, ஏக பார்வையைத் தவிர்த்து பல்வகைமையை யதார்த்தமாக ஏற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாது, வேறு பாட்டை அச்சத்திற்குரியதாகக் கருதாமல் பாராட்
டப்பட வேண்டியதாக அணுகுகின்றது.
இவ்வாறான அணுகுமுறை காலனித்துவம், நவதா ராளவாத முதலாளித்துவம் உருவாக்கும் மற்றை மைகளை(Others) கதாநாயகர்களாக அல்லது திருச்சபையின் மையமாக மாற்றுவது; மேற்குலகு பார்க்க விரும்பும் யதார்த்தத்தையும், யதார்த்தத்தை ஆய்வுமுறைக்குட்படுத்தும் முறையியலையும் முற்றிலும் கேள்விக்குட்படுத்துகின்றது. இவ்வாறான முறையியலை அங்கீகரிப்பது மாற்றம் விளிம்பு நிலையிலிருந்து மட்டுமே வர முடியும் என்ற பட்டறிவிலிருந்து எழுகின்றது. அப் பட்டறிவு கோட்பாட்டு மையத்திலிருந்து விலகி மக்கள் மையத்திலிருந்து புறப்படுகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் இம்முறையியலை புவிசார் அரசியலுக்கும், இறையியலுக்கும் அவசியமான தாக மாற்றினார்.
புவிசார் அரசியலில் ஆசிய-மையத்தின் முக்கியத்துவம் திருத்தந்தை பிரான்சிசின் புவிசார் அரசியலில் ஆசியா இரு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றதாக Enrico Beltramini குறிப்பிடுகின்றார். முதலாவது, ஆசியாவின் அரசியல், சமூக, பொருளாதார, யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளல் அதாவது கட்டமைக்கப்பட்ட அநீதியின் விளை வையும் அதிலிருந்து மீளெழ முயலும் மக்க ளின் வாழ்வும், அதே நேரத்தில் மேற்குலகின் அசிரத்தையும் உள்ளடக்கும். இரண்டாவது ஆசிய மையம் மேற்குலக ஏகாதிபத்தியத்தையும் மேற்குலக பேரரசுக் கட்டமைப்பையும் கேள்விக் குட்படுத்துகின்றது. விளிம்புமையத்தை நோக்கி நகர்தலிலே ஆசிய மையம் முக்கியத்துவம் பெறுகின்றது. திருச்சபையின் மையம் விளிம்பு நிலையில் இருக்க முடியுமே தவிர, மேற்குலக மையத்திலே அல்ல என்பது அவரது திடமான நம்பிக்கை.
இந்நகர்வு ஆசிய பல்வகைத் தன்மையை அங்கீகரிப்பது மட்டுமல்ல மேற்குலக இறையியல் அணுகுமுறையை அல்லது அறிவுசார் முறையியலை கேள்விக்குட்படுத்தி பூர்வீக முறையியலை, ஏற்கனவே ஆசியாவில் வெவ்வேறு நாகரிக மரபுகளுக்கூடாக வரும் முறையியலை ஊக்கப்படுத்துவதாகும். இம்முறையியல் அணுகுமுறை, விடுதலை, கிறிஸ்தவத்திலிருந்து மட்டும்தான் வரமுடியும் என்ற காலனித்துவ ஏக வழியை விடுத்து, ஆசியாவில் உள்ள பல் மதங்கள் கூறும் விடுதலை முறைமையையும் ஏற்றுக் கொள்வதாகும். இம்முறையியல் மேற்குலகு கட்டமைக்க முயலும் ஏக பேரரசுக் கட்டமைப்பைக் கட்டவிழ்க்கின்றது மட்டுமல்லாது, ஆசியாவை மேற்குலகு அடிமைப் பண்பாக கருதுகின்ற, அல்லது தனது நலன்களுக்காக மட்டுமே பயன் படுத்துகின்ற செல்நெறியை உடைக்கின்றது. இதன் மூலம் மேற்குலகின் வீழ்ச்சியையும், கீழைத்தேசத்தின் எழுச்சியையும் மறைமுகமாக சுட்டுவதாக அமையும். திருத்தந்தை பிரான்சிசின் அடிக்கடி கோடிட்டுக் காட்டப்படும் வாசகமாக இருப்பது: “யதார்த்தத்தை மையத்திலிருந்து நோக்குவதைவிட விளிம்பிலிருந்து பார்ப்பது அதிக தெளிவைத் தரும்”.
காலனித்துவத்திலிருந்து மீளெழும் நாடுக ளில் காலனித்துவத்தின் எச்சங்கள் தொடர்ந்தும் காலனித்துவத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும். அவ்வாறான தன்மையை Coloniality என்ற பதத்தினூடாக விளங்கிக் கொள்ள முடியும். Coloniality என்பதை காலனித்துவத் தன்மை என்று மொழிபெயர்த்தால், மேற்குலக அறிவு உருவாக்கம் மிக முக்கியம் பெறுகின்றது. மேற்குலக அறிவுக் கட்டமைப்பு அதற்கான முறையியலை கொண்டுள்ளது. அதையே அது ஏனையவற்றிலும் பார்க்க அதிக தரமுள்ளதாக கட்டமைத்து தர உயர்வாக வெளிக்காட்டுகின்றது. இம்முறையியல் ஏகாதியத்தியத்தை தக்கவைப்பதற்குரிய உத்தி யாக பயன்படுத்தப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஆசியாவை மையமாக நகர்த்தல், மேற்குலக அறிவுக் கட்டமைப்பு முறையியலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. இவ்வாறான செயற்றிட்டம் மேற்குலக- கீழைத்தேச உரசல் களுக்கும், இறுக்கத்திற்கும் வழி கோலும் என்பது அறியாததல்ல.
”சீனாவின் எழுச்சியைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்ற திருத்தந்தையின் கூற்றும் அதைத் தொடர்ந்த கருத்துரையும், ”மேற்குலகு கீழைத்தேசம், சீனா இவையெல்லாமே அமைதிச் சகமநிலையைப் பேணுவதற்குரிய கொள்திறனையும் செயற்திற னையும் கொண்டிருக்கின்றன.
நாங்கள் இதனை அடைவதற்கான உத்தியாக உரையாடலை பயன் படுத்த முடியும். கலந்துரையாடலைத் தவிர வேறு வழி கிடையாது”. அவர் சீனாவை தனது நண்பனாக கருதுவதாகவும் தொடர்ந்தும் உறவுகளையும் தொடர்புகளையும் பேண விரும்புவதாக காட்டிய அறிகுறி திருத்தந்தை பிரான்சிஸ் தூரநோக்கோடு கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்கிலிருந்தே அவதானிக்கப்பட வேண்டும். இவ்வாறான அவதானிப்பு மேற்கு லகு, சீனாவை அணுகும் விதத்திலிருந்து – வெறுமனே பொருளாதார அரசியல் வல்லரசாக அல்லாமல் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்டிருக்கின்றதை வலுப்படுத்தி சமத்துவத்தை ஆழப்படுத்துவதை சுட்டி நிற்கின்றது. வத்திக் கான் சர்வதேச தொடர்புகள் சார்ந்தும் புவிசார் அரசியல் சார்ந்தும் செப்ரெம்பர் 22 2018 இல் (வத்திக்கானுக்கும் சீனாவுக்குமிடையில்) கைச்சாத் திடப்பட்ட உடன்படிக்கை ஒரு மைல்கல் ஆகும்.
இந்த உடன்படிக்கைக்கு எதிராக தாய் வான் போர்க்கொடி தூக்கியதும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. தாய்வானுக்கும் ஐக்கிய அமெரிக்காவுமிடையிலான வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் இருக்கின்ற உறவுகளையும் அவதானிப்பது சிறந்தது.
ஒரு சில ஆய்வாளர்கள் Brics , Brics Plus இன் எழுச்சியையும் இதே கோணத்தில் பார்க்க விரும்புவர். மேற்கூறப்பட்டவற்றின் எழுச்சிக்கும் திருத்தந்தை பிரான்சிசுக்குமிடையேயான நேரடித் தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியாவிட்டாலும் திருத்தந்தை பிரான்சிஸ் Brics Plus இன் எழுச்சியை மாற்று உலக ஒழுங்கிற்கான அடிப்படையாக பார்க்கும் போது மகிழ்ச்சியடைந்திருக்கலாம் என்பது சிலரது கருத்து.
திருத்தந்தை பிரான்சிசின் பயணங்களையும் அவர் கட்டமைக்க விரும்பிய பல்துருவ உலக ஒழுங்குக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகுவது இலகுவாயிருக்கும்.
திருத்தந்தையின் பயணங்களை புவி சார் அரசியல் கோணத்திலிருந்து ஆய்வு செய்ப
வர்கள் முன்னிருந்த திருத்தந்தையர்களின் பயணங்களிற்கும் பிரான்சிசின் பயணங்களிற்கு மிடையேயான இடைவெளியை அவதானிக்கத் தவறுவதில்லை. அவற்றில் ஆசியாவை நோக்கிய பயணங்கள் மிக அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த வருடம் செப்ரெம்பர் மாதத்தில் 12 நாட்களாக தென்கிழக்காசியாவில் இந்தோனேசியா, பப்புவா நியூகினி, கிழக்கு தீமோர், சிங்கப்பூர் பயணங்கள் மிக அவதானிப்பு பெற்றவையாக கருதப்படுகின்றது.
சிறிலங்காப் பயணம் திருத்தந்தை பிரான்சிஸ் 2015 இல் சிறிலங்காவிற் கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங் காவின் ஒற்றையாட்சி சனநாயக மாதிரி, மையத்தில் அதீத அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ளது. கொழும்பு சிறிலங்காவின் அதிகார மையமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. போரின் பின்னரான வரலாற்றுக் காலப்பகுதியில் ஒரு சில அரசியல் தலைவர்களைத் தவிர வேறு எவருமே வடக்கிற்குப் பயணித்ததில்லை. அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ பயணங்களும் பார்வையிடலும் கொழும்பை மையப்படுத்தியதாக வரையறைப் படுத்தப்பட்டிருக்கும். கொழும்பைத் தாண்டினால் அது பௌத்த விகாரையை பார்வையிடுவதாக அமைந்திருக்கும். கொழும்பு மையத்திற்கும், பௌத்த விகாரைக்குமான தொடர்புகள் சிறிலங்காவின் சிங்கள-பௌத்த அடையாளத்தை வலியுறுத்தி ஆழப்படுத்தப்படுவதற்கான முயற்சி
களாகவே இந்த இணைப்புக்களையும் இணைப் புக்களிலுள்ள இடைவெளிகளையும் நோக்க வேண்டிய அவசியம் உள்ளது.
சிறிலங்காவின் அரசியல் அதிகாரம் மட்டும் கொழும்பில் மையப்படுத்தப்படவில்லை. சிங்கள கத்தோலிக்க மையமும் கொழும்பில்தான் மையப்படுத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சி மீ சொல்லாடலிற்குள் சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் உள்வாங்கப்பட்டது என்பதற்கான வரலாற்று சான்றுகள் நிறையவே உள்ளன. ஆனால் அவை ஒரு ஆய்வு நூல் ஆக இன்னும் ஒருங்கிணைக்கப்படவில்லை. ஒரு சில உதாரணங்களாக சிங்கள கத்தோலிக்க திருச் சபையின் ஒரு நாடு ஒரு தேசம் என்கின்ற ஏற்பு. நீர்காழும்பு, சிலாபம், கரையோரங்களிலிருந்து தமிழ்ப்பாடசாலைகள் சிங்கள மயமாவதற்கு சிங்கள கத்தோலிக்க திருச்சபையின் பங்கு மிக முக்கியமானது.
2015 ற்கு முன்னர் வருகை தந்த திருத் தந்தையர்கள் கொழும்பை மட்டுமே இலக்காக கொண்டிருந்தனர். திருத்தந்தையர்களின் கொழும்பை மையப்படுத்திய உத்தியாகபூர்வ பயணங்கள், சிங்கள கத்தோலிக்கர்கள் மத்தியில் சிறிலங்காவின் ஒற்றையாட்சித் தன்மையை இன்னும் அதிகமாக வலுப்படுத்தியது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது. 2015 திருத்தந்தையின் பயணம் போரின் பின்னர் தற்போதைய சிங்கள பௌத்த அரசின் அடிப்படை கருத்தியலான சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் அப்போது பதவியிலிருந்தவர்களுக்கு தமிழ் இன அழிப்பின் பின்னரான அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்துவதற்கு திருத்தந்தையின் பயணத்தை பயன்படுத்தியிருக்கலாம்./ பயன் படுத்தப்பட்டது. இது பற்றி வடக்கு கிழக்கிலிருந்தே தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் இப் பயணத்தின் ஆபத்தை வத்திக்கான பிரதிநிதியூடாக தெளிவுபடுத்தியிருந்தனர்.
தமிழ் இன அழிப்பு உச்சந்தொட்ட முள்ளிவாய்க்காலுக்கும் வருகைதர வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலுக்கான வருகை வரலாற்றில் இடம்பெற்றிருந்தால் அதை தமிழ் இன அழிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என்பதை அறிந்த கொழும்பு மைய கத்தோலிக்கத் திருச்சபை அப்போது அதிகாரத்திலிருந்த மகிந்த குடும்பத்துடன் இணைந்து நிச்சயமாக தடுத்திருக்க வேண்டும் என்று ஊகிப்பதைத் தவிர வேறு முன்னெண்ணம் கொள்ள முடியாது. அதே கொழும்புமைய திருச்சபைதான் மகிந்தவையும் அவரது பரிவாரங்களையும் திருத்தந்தையை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது என்பதை வரலாறு ஆவணப்படுத்தியுள்ளது.
அப்போதிருந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் நெருக்குவார அழைப்பின் பேரிலேயே மடுவிற்கான திருத்தந்தையின் பயணம் அமைந்திருந்ததை மறுக்கவியலாது. திருத்தந்தை அப்போதிருந்த அரசியல் நிலை மையை ஓரளவிற்கு அவரது பட்டறிவி லிருந்து விளங்கிக் கொண்டிருந்தாலும் முழுமையாக விளங்கிக் கொண்டாரா அல்லது அது பற்றிய தெளிவு கொடுக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனாலும் புவிசார் அரசியல் சார்ந்தும், திருத் தந்தை கொண்டிருந்த விளிம்புநிலை மைய நம்பிக்கையிலும் மடுப்பயணம் முக்கியம் பெறுகின்றது. மடுப்பயணம் கொழும்புமைய அதிகாரக் குவிப்பை கேள்விக்குட்படுத்தியதோடு விளிம்புநிலை நோக்கி சிறிலங்காத்திருச்சபை நகர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. சிறிலங்காத் திருச்சபை இன ரீதியில் பிளவு பட்டிருப்பது வெள்ளிடைமலை.
மடுவிற்கான பயணம் ஒரு வகையில் ஈழத்தமிழ் மைய திருச்சபையின் எழுச்சிக்கான அவசியத்தை கோடிட்டு அங்கீகரித்துக் கொண்டது என்ற உண்மை வரலாற்றுப் பதிவாகியது. தமிழ்த்தேச விடுதலை நோக்கிலிருந்து ஈழத்தமிழ் திருச்சபை எழுச்சி காண வேண்டும் என்கின்ற வேணவா போரின் பின்னான அரசியல் வெளியில் இன்னும் காத்திரமாக வலியுறுத்தப்பட்டது. நீதியை விடுதலையை மையப்படுத்தி ஈழத்தமிழ்த் திருச்சபை எழுச்சி காணவேண்டும் என்கின்ற கனவோடு திருத்தந்தையின் மடுப்பயணம் நிறைவுற்றிருக்கலாம்.