Tamil News
Home செய்திகள் திருகோணமலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

திருகோணமலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் இது வரைக்கும் 17 கோவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (24)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து  தெரிவித்த அவர்,

 திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7, உப்புவெளி 3, குச்சவெளி 4, கிண்ணியா 2, கந்தளாய் 1 என கோவிட்19 தொற்று அதிகரித்துள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள 05தாதியர்களுக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் ஒருவர் ஏற்கனவே  தடுப்பூசி ஏற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை நகர் பகுதியில் நேற்றைய தினம்  மூன்று பாடசாலையில் இருந்து மாணவன் மற்றும் ஆசிரியர் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் ஆலோசித்து வருகின்றது” என்றார்.

Exit mobile version