Home செய்திகள் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி

அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி

மாவீரர் நாளாகிய இன்று மாவீரர்களை நினைவுகூர்ந்து தாயகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் இல்லங்களில் நினைவுச்சுடர் ஏற்றி வணக்கங்களைச் செலுத்தினர்.

cf665fbf e2cb 4e13 a2f3 4a7df9f0577d அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மாவீர்களுக்கு அஞ்சலி

அதே போல் பொது மக்களும் தமது வீடுகளில் தங்களின் மாவீரர் உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், “தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.”

என்று  தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம், மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்யக்கூடாதென நீதிமன்றங்கள் கூடாக தடை  கோரி வழக்கு தொடர்ந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version