தாயகத்தின் முதுபெரும் கலை இலக்கிய பேராளரும் கல்விசார் ஆசிரியருமான பால பண்டிதர்வீ ரகத்திப்பிள்ளை பரந்தாமனின் இறுதிக் கிரிகைகள் இன்று (16) இடம்பெற்றன உடல்நல குறைவால் நேற்று முன்தினம் (14) அவர் காலமானார்.
அவர் வடமராட்சி புலோலியில் 1942 ஆம் ஆண்டு வீரகத்திபிள்ளை பார்வதி பிள்ளை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.கலை இலக்கிய துறையிலும் கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் பாடல் ஆசிரியராகவும் பல பட்டங்களை பெற்றிருந்த இவர் மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி, போடு போடு வீர நடை போடு, நெஞ்சினிலே நெருப்பேந்தி வாருங்கள், தம்பிகளே அன்பு தங்கைகளே போன்ற தாய எழுச்சி பாடல்களையும் எழுதி இருந்தார்.
அவரின் புகழுடல் புலோலி தெற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் உள்ள மாமறவர் மணிமண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதி வணக்க அஞ்சலியை தொடர்ந்து இன்று (16) தகனம் செய்யப்பட்டது.