தலைமறைவான ரிஷாட் பதியுதீன்; கொழும்பு, மன்னார், புத்தளம் பகுதிகளில் பொலிஸார் தேடுதல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமறைவாகியுள்ளார்.

ரிஷாத் பதியுதீனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சட்டமா அதிபர் நேற்று விடுத்த உத்தரவை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கு ஆறு பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுக்கள் கொழும்பு, மன்னார், புத்தளம் ஆகிய இடங்களில் ரிஷாத் பதியுதீனைத் தொடர்ந்தும் தேடி வருகின்றன.

அவர் தலைமறைவாகியதையடுத்து அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் பயணத் தடை சி.ஐ.டி.யினரால் பெறப்பட்டுள்ளது.