Tamil News
Home செய்திகள் தமிழச்செல்வனை நினைவுகூரக் கூடாது -பொலிஸார் எச்சரிக்கை

தமிழச்செல்வனை நினைவுகூரக் கூடாது -பொலிஸார் எச்சரிக்கை

யாழ். கொக்குவிலில் அமைந்துள்ள தமிழத் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகம் இன்று மாலை பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகள் எதனையும் நடத்தக்கூடாது என அங்கு நின்ற முன்னணியின் உறுப்பினர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு நினைவுகூருவதற்கு யாராவது முற்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளதாகவும்,  முன்னணியின் அலுவலகத்தில் நின்ற செயற்பாட்டாளர்களின் பெயர் விபரங்களை அவர்கள்  பதிவு செய்து சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Exit mobile version