Tamil News
Home செய்திகள் தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்காக மனமுருகும் இந்திய அரசியல்வாதி

தமிழகத்திலுள்ள ஈழத் தமிழர்களுக்காக மனமுருகும் இந்திய அரசியல்வாதி

தமிழகத்தில் இருக்கும் ஈழத் தமிழரகளின் இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மத்திய அரசு நிறைவேற்றப் போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

நெல்லையில் 12.08 அன்று செய்தியாளர்களை சந்தித்த போதே சீமான் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் மற்றும் திபெத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு கொடுத்த முன்னுரிமையினை தமிழர்களுக்கு வழங்கவில்லை. இந்தியாவிலுள்ள ஈழத் தமிழர்களுக்கு அரசாங்கம் எந்தவொரு அடிப்படை வசதிகளையும் வழங்கவில்லை. இப்படியிருக்கையில் அவர்களின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றுமா என்பது சந்தேகமே என்று சீமான் குறிப்பிட்டார்.

 

 

Exit mobile version