ஜம்மு நகரை குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் வியாழக்கிழமை இரவு வான்வழி தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அதை இந்தியா முறியடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதாக தகவல். இருப்பினும் இதை இந்திய இராணுவம் முறியடித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து 8 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. அதை முறியடித்துள்ளது இந்திய பாதுகாப்பு படை. பாகிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல் இந்திய பாதுகாப்பு படை வான் பாதுகாப்பு தடுப்பு இயந்திரம் மூலம் சுட்டு வீழ்த்தி உள்ளதாக தகவல். இதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். விமான நிலையத்துக்கு அருகில் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இதை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவல்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா மாவட்டங்களை ஒட்டி அமைந்துள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே உள்ள எல்லையோர இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி என தகவல். உதாம்பூர், சத்வாரி, சம்பா, ஆர்எஸ்.புரா மற்றும் ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி. இதனால் முன்னெச்சரிக்கையாக ஜம்மு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு காஷ்மீரின் சில மாவட்டங்கள், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை, குஜராத் மாநிலத்தின் எல்லை பகுதி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சைரன் ஒலி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.