‘ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும்’ இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை

“ஜனாதிபதி கோட்டாபய ஒரு ஹிட்லர் போல செயற்பட்டால் எவரும் குறைகூறமாட்டார்கள் குற்றம்சாட்டமாட்டர்கள் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தற்போதைய நிலைமை மாறாவிட்டால்  ஜனாதிபதி ஹிட்லராக மாறும் நிலையை உருவாக்கும் என எச்சரித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி அவ்வாறு செயற்படவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ஆனால் ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.