சோல்பரி யாப்பு பற்றிய பிற்குறிப்பு (முதலாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி) (பகுதி 4 பாகம் 15) மு. திருநாவுக்கரசு

சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலம் பனிப் போர் யுகம் தோன்றி உலகம் இரு அணிகளாக வியூகம் எடுக்கும் காலம் ,  பனிப் போர்  யுகத்தில் நேட்டோ (NATO) அணிக்கு  அமெரிக்கா தலைமை தாங்கத் தொடங்கிய காலம், இந்தியா சுதந்திரம் அடையும் காலம், இலங்கை சுதந்திரம் அடையப்போகும் காலம்  என்ற  அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு தலையாய காலச் சந்தியாகும்.
உலகளாவிய அரசியல்( பூகோள அரசியல் — Global politics ), இலங்கை — இந்தியா–  இந்து சமுத்திரம் சார்ந்த புவிசார் அரசியல்( Geopolitics) கண்ட அரசியல் ( continental politics ) சமுத்திர அரசியல் ( Oceanic politics ) இந்திய — இலங்கை அரசியல்,  இந்திய உள்நாட்டு அரசியல், இலங்கை உள்நாட்டு அரசியல் போன்ற அனைத்தையும் தழுவிய பல பரிமாண அரசியல் அறிவியல் பார்வை தமிழ் தலைவர்களிடம் சிறிதும் கிடை யாது. ஆனால் சிங்களத் தலைவர்கள் மேற்படி அனைத்தையும் தழுவிய கண்ணோட்டத்துடன் பிரித்தானிய இலங்கை அரசியலுக்கு இடையான முரண்பாட்டையும் , இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளையும் சரிவர உணர்ந்த நிலையில் சோல்பரி  யாப்பை உடனடி நீண்ட கால கண்ணோட்டத்துடன் வடிவமைப்பதில் ஈடுபட்ட னர்.
பிரிட்டானிய நேட்டோ  அணிக்கு முதன்மையாக தேவைப்பட்டது இலங்கையில் நவகாலனித்துவ நலனுக்கு பொருத்தமாக இரா ணுவ தளங்கள். எனவே பிரித்தானியாவுக்கு கடல் படை விமானப்படை தளங்களை வழங்கி  தமக்குத் தேவையான வகையில் இந்தியாவை எதிர்கொள்வதற்கும் ஈழத் தமிழரையும் மற்றும் மலையகத் தமிழரையும் முதலில் ஒடுக்கு வதற்கு வாய்ப்பான அரசியல் யாப்பை பெற்றுக் கொள்வதாகும்.
இலங்கையில் இராணுவ தளங்களை பிரித்தானியா அமைப்பது இந்தியாவுக்கு வெறுப்பான விடயமே ஆயினும் இந்தியா மீள முடியாத வாறு இந்து –  முஸ்லீம் இரத்த  சகதிக்குள் சிக் கொண்டிருந்த பின்னணியில் இந்தியாவை மீறி, இந்தியாவை கடந்து பிரித்தானியாவுடன் இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தங்களை செய்ய முடியும் என்று கண்டு கொண்டனர்.
உலக அரசியலில் தாம் எப்போதும் இந்தியாவின் பக்கமே என்று 1942 ஆம் ஆண்டு டி .எஸ்.  செனநாயக்கா இந்தியாவில் வைத்து இந்திய தலைவர்களுக்கு உறுதிப்படக் கூடிய போதிலும் தருணம் படைத்த போது அதனைக் கடந்து இந்திய எதிர்ப்பு — தமிழின அழிப்பு என்ற பார்வையுடன் தன் அரசியலை டி. எஸ் செனநாயக்கர் தலைமையிலான சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர்.
ஒருபுறம் இந்தியாவை ஒரு மூலைக்குள் அமர்த்தி வைத்துக் கொண்டு மறுபுறம் உள் நாட்டில் முறையே மலையக மக்களையும் ஈழத் தமிழரையும்  ஒடுக்குவதற்கான அரசி யலை முன்னெடுப்பதற்குரிய வகையில் பிரித்
தானியருடன் கூட்டிணைந்து சோல்பரி யாப் பையும் அதைத் தொடர்ந்த அரசியலையும் முன் னெடுத்தனர்.
சோல்பரி  யாப்பு  உருவாக்கிய 29 ஆவது ஏற்பாட்டையும் மீறி மலையக மக்களின்  குடியு ரிமை பறிப்பு,  வாக்குரிமை பறிப்பு போன்ற சட்டங் களால் பிரித்தானிய ஆள்பதிகளான  Hentry Monck- Mason உம் அவரை உடனடுத்து Soulbury பிரபுவும் ஆள்பதிப்  பதவியில் இருக்கும் காலத்திலேயே D. S. செனநாயகக்க அரசாங்கம்   களுத்து வெட்டாய் வெட்டியது.  இலங்கை அரசியல் யாப்பானது  Constitutional”Evolution” என்ற பரிணாம வளர்ச்சிக்கு போகாது Constitutional “ De – evolution அல்லது Degeneration” என்ற கீழ்நோக்கிய  சீரழிவுக்கு உள்ளாகும் தொடக்கம் இந்த 29 ஆவது சரத்து விவகாரத்தில் முதல்முறையாக அரங்கேறத் தொடங்கியது.  இந்த 29 ஆவது சரத்து தொடர்பான பின்னணி விபரங்களை அடுத்த அத்தியாயத்தில் விவரமாக பார்க்கலாம்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பளிக்க வல்லது என்று சோல்பரி யாப்பு உருவாக்கிய 29ஆவது சரத்தும் அந்த யாப்பின் பிதாமகன்களான சோல்பரி உட்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் , மற்றும்  இலங்கையின் முதலாவது பிரதமரான D.S.   செனநாயக்க   போன்றோர் முன்னிலையில்   களுத்து வெட்டாய் வெட்டுண்டு போனது.
புவிசார் அரசியலில் புவியியல் அவைவிடம்  நிரந்தரமானது. வல்லரசுகள் மாறலாம் ஆனால் புதுசார் அமைவிடம் மாறாது. அன்று வெளி வல்லரசு என்ற நிலையில்  1940 களின் பிற்பகுதியில் பிரித்தானிய பேரரசு இருந்த இடத்தில் இன்று இலங்கை விவகாரத்தில் சீனப் பேரரசு இருக்கிறது. அன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் D.S. சேனநாயக அரசாங்கம் இருந்த இடத்தில் இன்று ஜே.வி .பி தலைமையிலான அநுரகுமார  திசநாயக்க அரசாங்கம் இருக்கிறது. அன்று இலங்கைக்கு பிரித்தானிய உயிர் நண்பன்.  இன்று இலங்கைக்கு சீனா உயிர் நண்பன். அன்று D.S. சேனநாயக்க ஒன்றுபட்ட இலங்கைக்குள், ஒற்றையாட்சி அமைப்பின் கீழ், ஒரு நாடு , ஒரு மக்கள் என்ற கூக்குரலோடு United National Party (  ஐக்கிய தேசியக் கட்சி )  என்ற கொள்கையை முன்வைத்தார்.
இன்று அனுரகுமார திசநாயக்க தலைமையில் ஜே.வி. பியினர்  N.P. P . தேசிய மக்கள் சக்தி என்ற மகுடத்தின் கீழ் செனநாயகாவின்  அதே ஐக்கியம் — தேசியம் – சமத்துவம் என்ற இனமேலாதிக்க வாதக் கொள் கையை  இன்று பல இனங்கள்,  பல தேசிய இனங்கள் கிடையாது என்றும்  ஓரினம்,  ஒரு நாடு ,  ஒரு மக்கள் , ஒரு தேசம் என்று மேலும் மெருகூட்டியவாறு  செனநாயக்க வாதத்தை அச்சும் பிசகாமல்  அதிகம் வளர்ந்த வடிவில் முன் வைத்துள்ளனர். எப்போதும் பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் அளவால் சிறிய இனங்களுக்கு பாதுகாப்பு என்பது பிரதான கோட்பாடாகும். ஆனால் அத்தகைய பாதுகாப்பு கோட்பாடு இங்கு தகர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் பாதுகாப்பு என்பது அளவால் பெரிய இனத்திற்கு என்பதும், அதிகாரம் அளவால் பெரிய இனத்திற்கு என்பதும், ஜனநாயகம் என்பது அளவால் பெரிய இனத்தின் கைக்குரியது என்பதும் இலங்கை அரசியலில் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக் கொள் கையின்  தெளிவான பிரகடனமாகும்.
சுதந்திர காலத்தில் எப்படி உலகப் பேரரச வாதத்தோடு இணைந்து சிங்கள பௌத்த ஆட்சியாளர்கள் கட்டமைக்கப்பட்ட இனப்படு கொலை வாதத்தை வடிவமைத்தார்களோ அப்படியே இப்போதும் சிங்கள பௌத்த இனவாத ஆட்சியாளர்கள் தமிழருக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வாதத்தை வல்லரசுகளுடன் இணைந்து கட்டமைக்கின்றார் கள். சுதந்திரத்தின் பின்னான கால அடுத்த அத்தியாயம்
தொடரும்…