Tamil News
Home செய்திகள் சேர்ந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் இருந்து தமிழரசுக் கட்சி விலகவில்லை என்கிறார் ப.சத்தியலிங்கம்

சேர்ந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் இருந்து தமிழரசுக் கட்சி விலகவில்லை என்கிறார் ப.சத்தியலிங்கம்

‘உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்திய பின் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வவுனியா தெற்கு பிரதேச சபை தவிர்ந்த அனைத்து சபைகளிலும் தமிழரசுக் கட்சி போட்டியிடுகிறது.

எல்லா சபைளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம். ‘எமது மாவட்டம் ஒரு எல்லைப்புற மாவட்டம்’ என்றும் ‘எமது மாவட்ட ஆட்சி அதிகாரம் இந்த மண்ணின் பூர்வீக கட்சிகளுக்கு கிடைக்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அபிவிருத்தி நோக்கி நகர்வோம். அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

‘எல்லா சபைகளிலும் தமிழ் தேசிய கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்புள்ளது’.
‘சேர்ந்து பயணிக்கும் நிலைப்பாட்டில் இருந்து தமிழரசுக் கட்சி விலகவில்லை’ என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version