இலங்கையின் உள்ளூராட்சி சபைத் தேர்தலை சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர், எதிர்வரும் மே மாதம் 06ம் தேதி நடை பெறவுள்ளது.
கோவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல் வேறுகாரணங்களினால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்திருந்த சூழ்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது உள்ளூராட்சி தேர்தலை இடம் பெறுகிறது.
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என நான்கு விதமான தேர்தல்கள் இலங்கையில் நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடத்தப்படும் நான்கு விதமான தேர்தல்களில் மிகவும் சிக்கலான தேர்தல் முறை யாக இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முறைமை காணப்படுகின்றது. அதற்கான கார ணம், உள்ளூராட்சி சபைத்தேர்தல் கலப்பு
முறையாக காணப்படுவதே ஆகும்..
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 17,296,330 வாக்காளர்கள் இலங்கை முழுவதும் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர்.கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை விடவும், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு 155976 மேலதிக வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.
இலங்கையில் தற்போது 159, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சிபீடத்தில் உள்ள தேசிய
மக்கள் சக்தி அரசின் செல்வாக்கை குறைக்க தென்பகுதிகளில் உள்ள கட்சிகள் அனைத் தும் பலவிதமான எதிர் பிரசாரங்களை மேற் கொண்டுள்ள நிலையில் பிரதமர் ஹரணி அமரசூரியா தாம் இந்த தேர்தலில் மூன்றாவது வெற்றியை உறுதிப்படுத்துவோம் என கூறியுள் ளார்.
அவருடைய கூற்றில் இலங்கையில் தென் பகுதிகளில் அனேகமான சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க கூடிய கள நிலை இப்போதும் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனால் வடகிழக்கை பொறுத்தவரையி லும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராகவே சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த பொதுத்தேர்தலில் என்று மில்லாத வகையில் தேசியமக்கள் சக்தி வட கிழக்கில் இருந்து ஏழு தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவான நிலையில் இந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரசாரங் கள் தமிழ் மக்கள் மத்தியில் பலராலும் முன்வைக் கப்பட்டாலும் தமிழ் தேசிய கட்சி களிடையே ஒற்றுமை இன்மை, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி இப்போதும் இரண்டு அணி என்ற நிலையில் பிரசாரங்களில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக பிரசாரங்களை இந்த தேர்தலில் மேற்கொள்ளாத நிலைமை தொடர்வதால் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புத்தன்மை இந்த தேர்தலில் காண முடிகிறது.
உள்ளூர் வட்டாரங்களில் ஊர் செல்வாக்கை பெற்றவர்கள் கட்சி செல்வாக்குகளுக்கு அப்பால் இந்த தேர்தலில் தெரிவாகும் வாய்ப்புகள் அதிகளவில் காணப்பட்டாலும் வடகிழக்கை பொறுத்தவரை தேர்தலின் முடிவு என்பது தமிழ்தேசியத் துக்காக மக்கள் உறுதியாக உள்ளனரா அல்லது அதில் இருந்து விலகி சென்றுள்ளனரா என்ற முடிவுகளும் இந்த தேர்தலில் தமிழ்தேசிய கட்சிகளுக்கு வாக்க ளிக்காமல் விட்டால் ஏற்படலாம்.
அரசியல் என்பது அடிமட்டத்தொண்டர் களுக்கு விழிப்பூட்டி எதிர்கால தேவைகளை அடைய வேண்டுமானால் அது ஊர்களில் இருந்து தொடங்கி பிரதேசம்,மாவட்டம்,மாகாணம்,தேசி யம் கடத்தப்படுவதற்கு அடிமட்ட உள்ளூராட்சி தேர்தல் ஒரு அத்திவாரமாக அமைகிறது. இது கட்டாயம் ஈழவிடுதலைக்காக போராடிய இனம் போராடிக்கொண்டிருக்கும் இனம் அந்த விடுதலை தேவையை உணர்த்தும் வகையில் தமிழ்மக்கள் சிங்களக்கட்சிகளுக்கு சோரம் போகாமல் தமிழ்த் தேசிய கொள்கையுடன் உள்ளனர். அதனை பலப் படுத்தும் நோக்கில் ஏதோ ஒரு தமிழ்தேசிய கட்சிகளுக்கும் அந்த கட்சிகளில் கொள்கையில் உறுதியானவர்களுக்கும் வாக்களிக்க வேண்டிய தார்மீக கடமை தமிழர்களுக்கு உண்டு.
தனிநபர் புகழ்ச்சி, தனிநபர் வெறுப்பு, தனிநபர் நடிப்பு, தனிநபர் ஆளுமை என்பன சில தமிழ்தேசிய கட்சிகளில் அடிப்படை கொள் கையை சிதைத்து விடுகிறது. அதனை விட்டு விலகிச்செல்லும் அபாயச்சூழல் தற்போது கடந்த 2009, மே,18, க்கு பின்னர் கடந்த 16, வருடங்களாக வடகிழக்கில் தொடர்ச்சியாக காணமுடிகிறது.
உதட்டால் தேர்லுக்காக வாக்குகளை பெறவும் ஆதரவை பெறவும் தேசிய தலைவரையும், மாவீரர்களையும், அன்னை பூபதி யையும், தியாகி திலீபனையும் தமிழ்தேசியத் தையும் உச்சரித்துக்கொண்டு சிலர் சிங்கள தேசியத்திற்கு துணை போகின்ற போக்கை காண லாம். இப்படியானவர்கள் சில தமிழ்தேசிய கட்சிக ளில் பதவி நிலைகளில் இருந்து தமிழ்தேசிய கொள்கைபற்றாளர்களை ஓரம் கட்டும் நிலை தொடர்வதாலும் இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் வெறுப்படைந்து தேர்தலில் ஆர்வம் காட்டாத சந்தர்ப்பங்களும் உண்டு.இதனாலும் அறுதிப்பெரும்பான்மை ஆதரவு இன்றி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படலாம்.
வடகிழக்கை பொறுத்தவரை எதிர்வரும் மே 7, ம் திகதி தெரியவரும் பிரதேச,நகர, மாநகர, சபைகளில் ஆசனங்களை கூடுதலாக யார் பெறுகிறார், எந்த கட்சி பெறுகிறது என்பது தெரிந்துவிடும். என்னை பொறுத்தவரை எந்த சபைகளும் தனித்து ஆட்சியமைக்க கூடிய கள நிலை எந்த ஒரு கட்சிக்கும் தற்போது இல்லை. சேர்ந்து ஆட்சியமைக்கும் சூழலே உண்டு. அப்படியானால் தற்போது தேர்தல் பிரசாரங்களில் எதிரும் புதிருமாக பிரசாரங்களை மேற்கொண்ட கட்சிகள் தெரிந்தோ தெரியாமலோ இணைந்து சபைகளில் ஆட்சியமைக்கும் தேவை உண்டு.
இவ்வாறுதான் கடந்த 2018 லும் நடந்தது.இதில் தேசிய மக்கள் சக்தி ஆசனங்களை சில சபைகளில் பெற்றாலும் அவர்களும் ஏதோ ஓர் இரு கட்சிகளை சேர்த்தே ஆட்சியமைக்கும் சூழல் உண்டு.தமிழ்தேசிய கட்சிகள் எக்காரணம் கொண்டும் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகாமல் இருப்பதே தமிழ்த்தேசியத்தின் வெற்றியின் நகர்வை முன்னோக்கி செல்ல முடியும்.
சிலவேளை ஜனாதிபதி அநுரவுடன் கொழும்பில் இரகசிய உடன்பாடுகளை கண்டு வடகிழக்கில் உள்ள தமிழ்தேசிய கட்சிகள் சபைகளில் கூட்டு ஆட்சிக்கு உடன்படலாம்.அவ்வாறு செய்யும் கட்சிகளுக்கு இது இறுதி அஞ்சலியாகவும் அமையலாம். எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் பின்னடைவை அவ்வா
றான கட்சிகள் சந்திக்கும் அதனை பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாம் இன்னும் மூன்று தினங்களால் வெளிச்சத்துக்கு வரும். என்ன நடக்கும் என்பதை அறியலாம்.