செம்மணியில் சிறுமியின் ஆடையுடன் மேலும் இரு சிறார்களின் என்புக் கூடுகள் மீட்பு

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் (04) இரண்டு சிறார்களின் என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல்துறை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றும் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் இரண்டு சிறார்களின் என்புக் கூடுகளுடன், சிறுமி ஒருவரின் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணியான எஸ்.வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரையில் 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 37 என்புக் கூட்டு தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து நேற்று (03) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.

செய்மதித் தொழில்நுட்பத்தின் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது, சிறார்களின் என்புக் கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.
இரண்டு சிறார்களின் என்புக்கூடுகளும், வௌ;வேறு இடங்களில் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.