செட்டிக்குளம் – மன்னார் வீதியில், பழைய புகையிரத நிலையம் முன்பாக – முருகன் கோவில் அண்மையாக, வீதியோரத்தில் சிமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் அந்தப் பகுதிக்கு வந்த சிலரே கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று அறிய வருகின்றது. தமிழ் மக்கள் மட்டுமே செறிந்து வாழும் இந்தப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை அவர்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.