Home செய்திகள் செட்டிக்குளம் முருகன் ஆலயம் அருகேயே திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றம்

செட்டிக்குளம் முருகன் ஆலயம் அருகேயே திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றம்

VAVUNIYA CHEDDIKULAM BUDDHA STATUE 2 செட்டிக்குளம் முருகன் ஆலயம் அருகேயே திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றம்வவுனியா – செட்டிக்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரெனப் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. செட்டிக்குளம் முருகன் ஆலயம் அருகேயே இந்தப் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியா என்று தமிழ் மக்கள் கேள்வியும் அச்சமும் தெரிவித்துள்ளனர்.

செட்டிக்குளம் – மன்னார் வீதியில், பழைய புகையிரத நிலையம் முன்பாக – முருகன் கோவில் அண்மையாக, வீதியோரத்தில் சிமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் அந்தப் பகுதிக்கு வந்த சிலரே கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று அறிய வருகின்றது. தமிழ் மக்கள் மட்டுமே செறிந்து வாழும் இந்தப் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை அவர்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version