Tamil News
Home உலகச் செய்திகள் சுவிஸில் பல மாநிலங்களுக்கு பரவியுள்ள கொரோனா

சுவிஸில் பல மாநிலங்களுக்கு பரவியுள்ள கொரோனா

சுவிஸின் திசினோ மாநிலத்தில் ஒரு கொரோன வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டதை தொடர்ந்து கிராப்புண்டன்,ஜெனிவா ஆகிய மாநிலங்களிலும் இந்த வைரஸ் தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூர் என இங்குள்ள தமிழர்களால் குறிப்பிடப்படும் கிராப்புண்டன் மாநிலத்தில் இருவர் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவ்வதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ஜெனியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் இனங்காணப் பட்டுள்ளதாகவும் இவர் மூன்று தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் மிலான் நகரிலிருந்து திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவரின் தோற்று மிதமான நிலையிலேயே உள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த நபருடன் தொடர்புபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

நாட்டின் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட்ட சுவிஸ் பொது சுகாதார அமைச்சகம் ‘நிலைமைகள் ஆபத்தான நிலையில் இல்லை,இது ஒரு மிதமான நிலைமைதான்’ என கூறியுள்ளது.

Exit mobile version