சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்

கொரோனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டதையடுத்து நாட்டிலுள்ள பல்பொருள் அங்காடிகள் அனைத்திலும் பெருந்தொகையான மக்கள் முண்டியடித்து அத்தியவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருப்பதை நள்ளிரவு வரையில் காணக் கூடியதாக இருந்தது.

998 சுப்பர் மார்க்கெட்களில் முண்டியடித்த மக்கள்! காலியான அத்தியவசியப் பொருட்கள்பெரும்பாலான கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெற்றோல் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்தார்கள். இதனால், அரிசி, சீனி, பருப்பு போன்ற அத்தியவசியப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் நள்ளிரவுக்கு முன்னதாகவே காலியாகியிருந்தன.

பெருந்தொகையான மக்கள் கடைகளில் குவிந்ததால் வழமையான நேரத்தக்கு கடைகளை மூட முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கும் விற்பனை நிலையப் பணியாளர் ஒருவர், ஆனால், முக்கியமான பொருட்கள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.