சீனா மீது அமெரிக்கா கொண்டு வந்த 145 வீத வரி விதிப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கத் தலைப்பட்டுள்ளது. தாம் சீனா மீதான வரியை குறைப்பதற்கு ஆயத்தமாக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை(22) செய்தி யாளர்களிடம் பேசும்போது தெரி வித்துள்ளார்.
நாம் சீனாவுடன் நல்லுறவு களை வளர்த்துக்கொள்ள விரும்பு கின்றோம். எனக்கும் சீன அதிபர் சீ ஜின்பிங்கிற்கும் இடையில் நல்ல உறவுகள் உள்ளன. 145 வீத வரி என்பது மிக அதிகம் எனவே அதனை குறைப்பதற்கு நான் தீர் மானித்துள்ளேன். ஆனால் அதனை பூச்சியமாக குறைக்க முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விடுதலை நாள் என தெரிவித்த அமெரிக்க அதிபர் 90 இற்கு மேற்பட்ட நாடுகள் மீது வரியை விதித்திருந்தார். எனினும் பின்னர் அதனை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைத்திருந்தார். ஆனால் அதில் சீனா உள்ளடக் கப்படவில்லை. ஆனால் சீனா அதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது 225 வீத வரியை விதித் திருந்தது.
இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான போர் உலகின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வாரம் வெளியிடப்பட்ட அனைத்துலக நாணய நிதியத்தின் அறிக்கையிலும் உலகின் பொருளாதாரம் 2.8 வீத வளர்ச்சியில் இருந்து 1.8 வீத வளர்ச்சியாக பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமது கொள்கைகளில் மாற்றம் ஏற்பட லாம் என்று அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசன்ரும் இந்தவாரம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சீன வெளி விவகார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் தாம் போரை விரும்பவில்லை எனவும், ஆனால் போரைக் கண்டு அஞ்சவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும், கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து எதனையும் சாதிக்க முடியாது என அது கடந்த புதன்கிழமை(23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.