சிறுவர் தினத்தை முன்னிட்டு காணமலாக்கப்பட்ட உறவினர்களால் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்ட தமிழ் குழந்தைகள் எங்கே? அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டும்’ என வலியுறுத்தி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்ட காணாமல்போனவர்களின் உறவுகள், ‘சின்னஞ்சிறு பிள்ளைகள் செய்த பிழை என்ன?’, ‘சிறுவர்கள் மீண்டும் வருவார்களா?’, ‘குற்றவாளியை விசாரணை செய்து தண்டனை வழங்கு’, ‘நீதி தேவதையே கண் திறந்து பார்’, ‘பாடசாலை சென்ற பாலகர்கள் எங்கே?’, ‘சிறுவர்கள் மீண்டும் வருவார்களா?’ போன்ற வாசகங்களை கொண்ட பதாதைகள் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் ஒளிப்படங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.