சிறுதீவில் தேடுதல் ஆயுதங்கள் மீட்பு

யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்று பிற்பகல் இராணுவத்தினருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் காவல்துறையினருடன் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இவற்றை மீட்டனர்.

மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளனர். இதில் டெற்னேற்றர்கள், C – 4 வெடிமருந்து மற்றும் பல வெடிமருந்துகள் பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.