Home செய்திகள் சிறீலங்கா வான்படையின் விழாவை கொண்டாட வந்த இந்திய விமானங்கள்

சிறீலங்கா வான்படையின் விழாவை கொண்டாட வந்த இந்திய விமானங்கள்

சிறீலங்கா வான்படையின் 70 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்கு இந்திய வான்படையின் போர் விமானங்கள் சிறீலங்காவுக்கு வந்துள்ளன.

மிக் மற்றும் பல்வேறு வகையான பெருமளவான போர் விமானங்கள் சிறீலங்காவுக்கு வந்து விமாவுக்கு முன்னரான ஒத்திகைகளில் ஈடுபட்டு சிங்கள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தன.mic iaf சிறீலங்கா வான்படையின் விழாவை கொண்டாட வந்த இந்திய விமானங்கள்போரின் போது சிங்கள வான்படையானது தமிழின அழிப்பில் முக்கிய பங்கு வகித்திருந்தது. நாவாலி தேவாயலம் மற்றும் செஞ்சோலை படுகொலைகள் என பெருமளவான அப்பாவி தமிழ் மக்களை சிறீலங்கா வான்படையே படுகொலை செய்திருந்தது.ஆனால் இந்தியா வான்படை அதன் விழாவை கொண்டாடுவது, இந்திய அரசின் கோர முகத்தை வெளிக்காட்டி நிற்கின்றது என தமிழ் செயற்பாட்டாளர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version