கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என சிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவித்துள்ளதை வரவேற்பதாக சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்சே நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில், “கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்படும்”எனத் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மேற்கோளிட்டு Alaina B. Teplitz தனது ட்விட்டரில் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
Welcome media reporting on PM’s announcement to end mandatory cremation of COVID victims. Implementation of a revised practice that is in line with international public health norms and respects religious rites is a positive action.
— Ambassador Teplitz (@USAmbSLM) February 10, 2021
இதேவேளை சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும் மத சடங்கு முறைகளுக்கும் மதிப்பளிப்பது சாதகமான நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.