சிறீலங்காவுக்கு அமெரிக்க ஆங்கில ஆசிரியர்கள்

அமெரிக்காவில் இருந்து 30 ஆங்கில ஆசிரியர்களை பணியில் அமர்த்தும் உடன்பாடு ஒன்றில் சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா தெப்லிஸ்ம் சிறீலங்காவின் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசமும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டத்தில் இடம்பெறும் ஆங்கில ஆசிரியர்கள் சிறீலங்காவில் உள்ள பின்தங்கிய இடங்களில் பணியில் அமர்த்தப்படவுள்ளதாக சிறீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் படைத்துறை மற்றும் பொருளாதாரத்துறை ஆகியவற்றில் தலையீடுகளை மேற்கொண்டுவரும் அமெரிக்கா தற்போது பொதுமக்களுக்கான சேவைத் துறையிலும் தனது தலையீடுகளை மேற்கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.