Tamil News
Home செய்திகள் சிறீலங்காவில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொடர்பில் இந்தியாவில் குழப்பம்

சிறீலங்காவில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொடர்பில் இந்தியாவில் குழப்பம்

சிறீலங்காவின் திவிரும்போல பகுதியில் சீதைக்கு ஆலயம் அமைப்பது தொட-ர்பில் இந்தியாவின் இரு பெரும் கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவில் ஆலயம் அமைப்பதை நடைமுறைப்படுத்தாது, அதனை சரிபார்க்கும் நடவடிககைகளில் மத்தியப் பிரதேச அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சிவராஜ் சிங் சோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையில் நேற்று (16) பலத்த வாக்குவதாம் ஏற்பட்டிருந்தது.

சிறீலங்காவில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்ததாக கருதப்படும் இடத்தில் அவருக்கு ஆலயம் அமைப்பதாக 2010 ஆம் ஆண்டு பாரதிய ஜதனாக் கட்சி தீர்மானித்திருந்தது. அதற்கு சிறீலங்கா அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

தற்போது கமல்நாத் அரசு சீதை கடத்தப்பட்டது உண்மையா என விசாரணை நடத்தப்போதவதாக தெரிவிப்பது மக்களை வேதனைப்படுத்தும் செயல் என சிவராஜ் தெரிவித்துள்ளார்.

அசோக வனத்தில் சீதை சிறைவைக்கப்பட்டிருந்ததை உலகமே அறிந்திருந்தது ஆனால் அதனை தற்போது இந்த அரசு விசாரணை செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆலயம் கட்டுவதற்கான எந்த முயற்சியையும் சிவாரஜ் அரசு எடுக்கவில்லை என பொதுமக்கள் தொடர்புத்துறை அமைச்சர் பி.சி சர்மா தெரிவித்துள்ளார். அவர்கள் இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version