Tamil News
Home செய்திகள் சிறீலங்காவின் முடிவால் ரஸ்யா கவலை

சிறீலங்காவின் முடிவால் ரஸ்யா கவலை

ரஸ்யாவின் 3 முன்னனி பல்கலைக்கழகங்களை தனது அங்கீகாரப் பட்டியலில் இருந்து சிறீலங்காவின் மருத்துவ சபை நீக்கியது தொடர்பில் ரஸ்யா தூதரகத்தின் கலாச்சார பிரிவு தனது கவலையை தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படாது இந்த நடவடிக்கையை சிறீலங்கா மேற்கொண்டுள்ளது. சிறீலங்காவின் மருத்துவ சபையில் அங்கம் வகிப்பதற்கு ரஸ்யாவின் பல்கலைக்கழகங்கள் பணம் செலுத்தி வருகின்றன. கடந்த 60 வருடகால சிறீலங்கா – ரஸ்யா உறவில் ரஸ்யா சிறீலங்கா மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வந்துள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version