Tamil News
Home செய்திகள் சிறிலங்கன் எயர்லைன்ஸ் சிறிலங்கா – இந்தியாவிற்கான பயணத்தை மே 15இல் ஆரம்பிக்கின்றது

சிறிலங்கன் எயர்லைன்ஸ் சிறிலங்கா – இந்தியாவிற்கான பயணத்தை மே 15இல் ஆரம்பிக்கின்றது

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், இலங்கை – இந்தியாவிற்கான தனது போக்குவரத்தை மே 15இல் தொடங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.வட இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் சின்தா வீரசிங்க இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்பை அடுத்து, இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், அத்தியாவசியமானால் மட்டுமே சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொள்ளும்படி தனது மக்களைக் கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 50% ஆக குறைந்திருந்தது.ஆனால் நாட்டு நிலைமை நாளாந்தம் சீராகி வருவதால், இந்தியாவிலிருந்தான போக்குவரத்தை மீண்டும் தொடங்கவுள்ளதாக வீரசிங்க மேலும் தெரிவித்தார்.மற்றய நாடுகளிலும் பார்க்க இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகம் இலங்கைக்கு சுற்றுலா வருகின்றனர்.

கடந்த வருடம் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 450.000பேர் இந்தியர்களாவர். சுற்றுலாப் பயணிகள் 50பேரில் ஒருவர் இந்தியராவார்.

Exit mobile version