Tamil News
Home உலகச் செய்திகள் சிரியாவில் துருக்கி மற்றும் சிரியபடைகளிடையே கடும் மோதல்

சிரியாவில் துருக்கி மற்றும் சிரியபடைகளிடையே கடும் மோதல்

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரஸ் அல் அய்ன் நகருக்கு அருகே உள்ள உம் ஷைபா கிராமத்தில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு தரப்பும் துப்பாக்கிகளைக் கொண்டு சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வருவதாக சிரியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

வடக்கு சிரியாவில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் கவலை அளிப்பதாக ஐ.நா சபை தெரிவித்த நிலையில் மீண்டும் இரு நாட்டுப் படைகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன.

சிரியாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் வன்முறை காரணமாக 2 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

முன்னதாக, சிரியாவில் குர்திஷ் படைகளுக்கு எதிராக துருக்கி இராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றது. துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்திஷ் படையினர் பின்வாங்கி உள்ளனர்.

இந்நிலையில் துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இரு நாட்டுப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version