இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் ஒருநாடு என் கோட்பாடு மற்றும் வடக்குகிழக்கை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள். தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள் ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்மந்தன் இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை 300 கோடிரூபா வீட்டைவாங்கியவரால் வாய்திறந்து கதைக்கமுடியாது இதேபோல சுமந்தரினும் அதற்கு அடிபை எனவும் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

இதன்போது வவுனியாவில் உருவாக்கப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் இச் சங்கமே தொடற்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய சங்கங்கள் போராட்டங்களை மழுங்கடிப்பக ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.