சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைதாவர்

கொவிட் 19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கமைய, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் அவ்வாறானவர்களை கைதுசெய்ய சிறிலங்கா காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக காவல்துறையினர் சிவில் உடையில் கடமையில்  ஈடுபடவுள்ளனரென, பிரதிப் காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையும் இன்று (28) முதல் முன்னெடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.