361 Views
சபாநாயகர் கரு ஜயசூரியாவை சிறீலங்காவிற்கான சீனத் தூதுவர் செங்சு யூவான் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நிலைமைகள் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சீன அரசாங்கம், அதிகாரிகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து சீனத் தூதுவர், சபாநாயகருக்கு விளக்கமளித்தார்.
சீனா முகங்கொடுத்திருக்கும் சவாலைச் சமாளிக்க இந்நேரத்தில் நாடாளுமன்றம் சீனாவுடன் உறுதுணையாக நிற்கும் என்ற உறுதிமொழியை சபாநாயகர் சீனத் தூதுவருக்கு வழங்கினார்.
இதேவேளை, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினார், 563 பேர் உயிரிழந்தும், 28,256பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.