சத்தீஸ்கர் சுக்மா- பிஜப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த போதலில் போது கடத்தப்பட்ட மத்திய ஆயுத காவல் படை அதிகாரியின் தற்போதைய புகைப்படத்தை மாவோயிஸ்ட்கள் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக மாவோயிஸ்ட்கள் வெளியிட்ட அறிக்கையில், கடத்தப்பட்டுள்ள ராகேஸ்வர் சிங் மன்ஹாஸை விடுவிக்கப்பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் பெயர்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அதன் பின் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரியை விடுதலை செய்வதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது கடத்தப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அதிகாரியின் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.