கோட்டபாயா அமெரிக்க குடியுரிமையை இழந்துள்ளாரா?

அமெரிக்க குடியுரிமையை தான் இழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவந்த ஆவணம் போலியானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 17, அன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள தூதரக பிரிவின் தலைவர் முன் கோட்டபயா நேரில் ஆஜராகி, அமெர்க்க சட்டத்தின்படி தனது அமெரிக்கக் குடியுரிமையை கைவிடுவதாக உறுதிமொழியில் கையெழுத்திட்டார்.

தான் பெற்ற அமெரிக்காவின் குடியுரிமை தகுதியிழப்பிற்கான சான்றிதழ் என்று கூறி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஆவணம் போலியானது என கோட்டபயா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.